நான் ஏன் அடுத்து மேரேஜ் பண்ணல? தெளிவாத்தான் இருக்காங்க வனிதாக்கா..

vanitha
ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி அதன் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களால்தான் மிகவும் பிரபலமானார். தன்னுடைய முதல் திருமணம் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகி அந்த திருமண வாழ்க்கையில் இருந்து வெளிவந்தார். அதன் பிறகு லிவிங் ரிலேஷன்ஷிப் ,இரண்டாவது திருமணம் என அடுத்தடுத்து அவர் மீது பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன. இதற்கிடையில் தான் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்து கொண்டு தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டார்.
அதிலிருந்து அவரை வனிதா அக்கா என்றே தான் அனைவரும் அழைத்து வந்தனர். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பாப்புலர் அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு அவருக்கு வந்தது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட வனிதா ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகவே மாறினார். தற்போது படங்களில் நடித்து வரும் வனிதா ஒரு படத்தையும் இயக்கி இருக்கிறார். மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கின்றது.
இந்த படத்தின் மூலம் தன்னுடைய மகளை தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்துகிறார் வனிதா. மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் ரிலேஷன்ஷிப் இருந்து அதன் பிறகு பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .மீண்டும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள் என்றதும் மறுபடியும் இவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற ஒரு சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தன. ஏனெனில் இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி அப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அது ஒரு திரைப்படத்தின் போஸ்டர் என்று.
இந்த நிலையில் அடுத்து ஏன் நான் கல்யாணம் பண்ணவில்லை என்பதற்கான காரணத்தை வனிதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .ஒரு தடவை எனக்கு கல்யாணம் ஆனது. சந்தர்ப்பம் சூழ்நிலை விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பிறகு இரண்டு பேரும் ஒன்றாக இல்லை. அடுத்து உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் யாரும் நினைக்க மாட்டார்கள். லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார்கள் அல்லது ஒரு டேட்டிங் வாழ்க்கையில் போக வேண்டும் என நினைப்பார்கள். கல்யாணம் என்பது ஒரு பெரிய கமிட்மெண்ட் .கண்டிப்பாக சுதந்திரம் என்பது இருக்கவே இருக்காது. என்னதான் நாம் ஒரு நட்பாக பழகி ஒரு பார்ட்னருடன் பழகினாலும் கடைசியில் திருமணம் என்பது திருமணம் தான்.

mister
கண்டிப்பாக சில கண்டிஷன்ஸ் என்பது இருக்கும். இதையெல்லாம் தாண்டி நான் ஏதாவது ஒன்னு பண்ண வேண்டும் என்று நினைத்தது தான் என்னுடைய டிரெடிஷன். எனக்கு அது அமையவில்லை என்பது எனக்கு ஒரு வருத்தமாக இருக்கும். எனக்கும் ஒரு தனிமை இருக்கும். எல்லாமே இருக்கும் .ஆனால் ஒரு சில பேருக்கு அது அமைந்து விடுகிறது. அவ்வளவுதான். ஏன் எனக்கு திருமணம் என்பது ஒரு பேச்சு பொருளாக மாறியது என்றால் நான் இப்போது வரைக்கும் எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை .
கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் நான் இல்லை. ஏனெனில் என்னுடைய மனதில் ஓடுவது என்னுடைய கமிட்மெண்ட்ஸ். என்னுடைய மைண்ட் செட் மேரேஜ். எனக்கு இந்த டைம் பாஸுக்கு லவ் பண்ணுவது ,டைம் பாஸுக்கு டேட்டிங் பண்ணுவது. இந்த மைண்ட் செட் எனக்கு கிடையாது. அதுதான் எனக்கு பெரிய பிரச்சனையும் கூட .ஒரு கட்டத்தில் அதுவும் நாம் அடிபட்ட பிறகு இன்னொருத்தரை நம்ப முடியாது. அப்படி ஒரு ஆள் அமைவதும் ரொம்ப கஷ்டம் என வனிதா கூறி இருக்கிறார்.