மீண்டும் ஃபார்முக்கு வரும் அஜித்.. மட்டைய போட்டது அதுக்கு தானா?
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். சினிமாவை தாண்டி பல பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய பழைய பேட்டிகளை பார்க்கும் பொழுது பணம் சம்பாதிக்கவே சினிமாவிற்கு வந்தேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவருடைய பேஷன் என்பது வேறு .
அஜித்தை பொறுத்தவரைக்கும் கார் மற்றும் பைக் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்துபவர் .அதையும் தாண்டி துப்பாக்கி சுடுதல் ட்ரோன் தயாரித்தல் போன்ற விஷயங்களிலும் தன்னுடைய ஈடுபாட்டை செலுத்தி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு அட்வைஸ்ராகவும் இருந்தார் அஜித் .
தற்போது கோலிவுட்டில் இவருடைய படங்களுக்கு என நல்ல ஓபனிங் இருந்து வருகிறது. இவருடைய நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. தற்போது ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என இன்னும் முடிவு செய்யப்படவில்லை .
இந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன .துபாயில் விரைவில் நடக்கவுள்ள கார் பந்தயத்தில் மீண்டும் அஜித் களம் இறங்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த செய்தியை பிரபலகார் பந்தய வீரரான நரேன் கார்த்திக் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதனால் அந்த கார் பந்தயத்தில் கலந்து கொள்ள அஜித் தன்னை தயார்படுத்த ஆயத்தமாவார் என்று தெரிகிறது.
சமீப காலமாக புது வகையான சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் அஜித் அதை அவ்வப்போது ஓட்டி மகிழ்கிறார். அதுவும் இல்லாமல் சென்னையை விட துபாயில் தான் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் அஜித். ஒருவேளை இந்த கார் பயந்த இடத்தில் கலந்து கொள்வதற்காக தான் அங்கு பயிற்சிகளை எடுக்கிறாரோ என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.