ஏ.ஆர்.ரகுமானை விட இப்போ அனிருத் தான் அந்த விஷயத்துல கிங்... பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

தமிழ்த்திரை உலகில் 1992ல் ஒரு புயல் வந்தது. அது இசைப்புயல். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் வந்தவர் தான் அந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். படத்தில் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் காதலன், இந்தியன், முதல்வன், பாய்ஸ் என பல படங்களில் ஏ.ஆர்.ரகுமான் இளைஞர்களின் நாடி நரம்புகளில் தன் இசையால் முறுக்கேற்றினார்.

காதல், மெலடி, குத்து என வெரைட்டிகளைக் கொடுத்து அசத்தினார். அப்போது அவர் தான் நம்பர் ஒன். ஆனால் இன்று என்னவோ எல்லாரும் அனிருத் பக்கம் வந்துவிட்டனர். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பாருங்க...

தேவாரா படத்துல அனிருத் ரொம்ப ஆர்வமாக இருக்காரு. ஒரு விழாவுல பாடுறாரு. அங்க ஆடியன்ஸ் சைடுல யாரோட ரெஸ்பான்ஸ்சும் இல்லை. அது ஃபேக் வீடியோன்னுட்டாங்க. அப்புறமா அனிருத் என்னை இப்படி பண்ணிட்டீங்களன்னு தியேட்டர்ல போய் பாட ஆரம்பிச்சிட்டாரு. ஏன் அனிருத் இவ்ளோ ஆர்வமா இருக்காருன்னு ஆங்கர் கேட்கிறார். அதற்கு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பாருங்க.


ஆந்திராவுல தன்னோட இடத்தை நிறுவுவதற்கான முயற்சியாகத் தான் நாம எடுத்துக்கணும். ஆனா இங்க வந்து அனிருத் நம்பர் ஒன் இசை அமைப்பாளரா இருக்காரு. ஒரு காலத்துல ஏ.ஆர்.ரகுமான் நம்பர் ஒன்னாக இருந்தாரு. ஏ.ஆர்.ரகுமானை விட இவரோட இசை தான் அதிகமாக ஆடியோ ரைட்ஸ் விற்கப்படுது.

சம்பளமும் அனிருத் தான் அதிகமா வாங்குறாரு. அதனால இவர் தான் நம்பர் ஒன். ஆனா தெலுங்குல இவருக்கு அந்தளவுக்கு மார்க்கெட் இருக்கான்னா அது கம்மி தான். ஏன்னா இவரை விட பெரிய இசை அமைப்பாளர்கள் எல்லாம் அங்கே இருக்காங்க.

அதனால இந்த மாதிரி படம் கிடைக்கும்போது இவர் தன்னை அங்கு நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சியை அவரு எடுக்காருன்னு தான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it