ஏஸ் பட டைரக்டர் லைஃப் காலி!.. விஜய் சேதுபதி இப்படி செய்யலாமா?!. கொதிக்கும் பிரபலம்!..

by MURUGAN |
ace
X

Ace Movie: சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்தான் விஜய் சேதுபதி. பல புதிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பீட்சா கார்த்திக் சுப்பாராஜ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாலாஜி தரணிதரன், சூது கவ்வும் நலன் குமாரசாமி, பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் என பலரின் முதல் படங்களில் விஜய் சேதுபதிதான் ஹீரோ.

துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கினார். நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். வழக்கமாக மற்ற நடிகர்கள் நடிப்பது போல இல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் இயல்பாக நடித்து ஸ்கோர் செய்து ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கியவர் இவர்.

ஒரு கட்டத்தில் வில்லனாகவும் நடிக்க துவங்கினார். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே அவர் ஹீரோவாக நடித்து வெளியாகும் படங்கள் ஓடுவது இல்லை. விக்ரம், மாஸ்டர், ஜவான் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார். பல வருடங்கள் கழித்து அவர் ஹீரோவாக நடித்து வெளியான மகாராஜா படம் சூப்பர் ஹிட் அடித்தது.


அதன்பின் இப்போது ஏஸ் என்கிற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து நல்லநாள் பார்த்து சொல்றேன் என்கிற படத்தை இயக்கிவர். இந்த படம் 2018ம் வருடம் வெளியானது. இந்த படம் தோல்வி அடையவே ’உன் இயக்கத்தில் நான் இன்னொரு படத்தில் நடித்து கொடுக்கிறேன்’ என வாக்குறுதி கொடுத்தார் விஜய் சேதுபதி.

அது நடக்க 7 வருடங்கள் ஆகிவிட்டது. ஏஸ் படத்தை கூட கடந்த 2 வருடங்களாக எடுத்து வந்தனர். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டுமே ஏஸ் படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. இடையில் இயக்குனர் ஜனநாதன் விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை தயாரித்து இயக்கி வந்தபோது திடீரென இறந்துவிட்டார். எனவே, அந்த படத்தை ஆறுமுக குமாரை தயாரிக்க சொன்னார் விஜய் சேதுபதி. ஆனால், அந்த படமும் ஊத்திக்கொண்டது.

இப்போது ஏஸ் படமும் ஊத்திக்கொண்டது. ஏனெனில், இப்படி ஒரு படம் வெளியானதே யாருக்கும் தெரியவில்லை. இந்த படத்திற்கு சரியான அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை. இதை விஜய் சேதுபதியே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மொத்தத்தில் ஆறுமுக குமாரின் சினிமா கெரியர் விஜய் சேதுபதியால் காலி ஆகிவிட்டது. இந்த தகவலை வலைப்பேச்சி பிஸ்மி ஊடகம் ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

இப்போதுள்ள பல ஹீரோக்கள் தனக்கான சம்பளத்தை கொடுத்தால் போதும் என நினைக்கிறார்கள். கதை நன்றாக இருக்கிறதா என பார்ப்பதில்லை. யார் இயக்குனராக இருந்தாலும் நடிக்கிறார்கள். விஜய் சேதுபதியும் அப்படித்தான். அதனால்தான் ஏஸ் படம் ஊத்திகொண்டது என அவர் பேசியிருக்கிறார்.

Next Story