தனுஷ் ஆசைப்பட்டு அழைத்து வந்த பாடகி..இமான் செஞ்ச வேலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். பல நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் அதையெல்லாம் உடைத்து இன்று ஒரு நடிப்பு அசுரனாக அனைவர் மத்தியிலும் கெத்தாக நிற்கிறார் என்றால் அவருடைய கடின உழைப்பு மற்றும் சினிமா மீது அவருக்கு இருக்கும் பேஷன் தான் காரணம். தொடர்ந்து பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ்.




இந்த நிலையில் தனுஷுக்கும் தனக்குமான உறவை பற்றி பாடகி சுசித்ரா சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது தனுஷை முதன் முதலில் ஒரு விழாவில்தான் பார்த்தாராம் சுசித்ரா. அந்த விழாவில் தனியாக ஒரு மூலையில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் அவருக்கு அருகில் உட்கார்ந்து ரொம்ப நேரம் தான் பேசியதாக சுசித்ரா கூறினார்.

அதிலிருந்தே என்னை தனுஷுக்கு பிடித்துவிட்டது. என்னுடன் நட்பை ஆரம்பித்தார் என சுசித்ரா கூறினார். இந்த நட்பின் மூலமாகத்தான் தனுஷ் நடித்த மதுரா ஜில்லா மச்சான் தாண்டி பாடலை என்னை பாடும்படி தனுஷ் கூறினார் என சுசித்ரா கூற இசையமைப்பாளர் இமானோ சுசித்ராவிடம் ‘தனுஷ் சொன்னாருங்கிறதுக்காகத்தான் உன்னை பாட வைக்கிறேன்’ என கூறினாராம்.

இது சுசித்ராவுக்கு பெரும் அவமானம் தர அட போடா நீயும் உன் மியூஸிக்கும் என சொல்லி திரும்ப வந்து விட்டாராம் சுசித்ரா. பின் தனுஷ் போன் செய்து சுசித்ராவை சமாதானம் படுத்த அதற்கடுத்த படியாக தனுஷ் நடித்த வேங்கை படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் தனுஷ்.

இப்படி இருந்த இவர்கள் நட்பு எப்படி முறியடிக்கப்பட்டது என்பதை குறித்தும் சுசித்ரா கூறினார். நயன் , சூர்யா, சௌந்தர்யா ரஜினி, தனுஷ் உட்பட அனைவரும் செல்லக் கூடிய ஒரு யோகா மையம் இருக்கிறதாம். அங்குதான் சுசித்ராவும் யோகா பயிற்சி செய்ய போவாராம். அப்போது யோகா டீச்சர் சுசித்ராவிடம் ‘ நேத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நிச்சயதார்த்ததிற்கு ஏன் போகல’ என கேட்டாராம்.

அப்போ சுசித்ரா ‘அந்த குடும்பத்தில் தனுஷை தவிற யாரையும் எனக்கு பிடிக்காது. பேசவும் மாட்டேன்’ என அந்த யோகா டீச்சரிடம் சொன்னாராம் சுசித்ரா. இதை அருகில் இருந்த பூர்ணிமா என்ற தனுஷின் தோழி தனுஷிடம் வேறு மாதிரியாக சொல்லி இவர்களுக்குள் சண்டைவர காரணமாகிவிட்டார் என சுசித்ரா கூறினார்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it