விமர்சகர்களால் சினிமா சாகக் கூடாது!.. டிஎன்ஏ வெற்றி விழாவில் டைரக்டர் மனம் விட்டு பேசிட்டாரே!..

by SARANYA |
விமர்சகர்களால் சினிமா சாகக் கூடாது!.. டிஎன்ஏ வெற்றி விழாவில் டைரக்டர் மனம் விட்டு பேசிட்டாரே!..
X

அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிஎன்ஏ படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று படத்துக்கு சக்சஸ் மீட் வைத்து கொண்டாடி விட்டனர்.

நடிகர் தனுஷின் குபேரா படத்துக்கு ஞாயிற்றுக்கிழமையே ஹைதராபாத்தில் சிரஞ்சிவியை எல்லாம் அழைத்து பிரம்மாண்ட விழாவை படக்குழு நடத்தி படம் பெரிய பிளாக்பஸ்டர் என அறிவித்து விட்டனர். 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் இதுவரை 60 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதிகபட்சமாக 150 கோடி வரை வசூல் வரும் என்கின்றனர்.


அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்தை இன்னொரு டூரிஸ்ட் ஃபேமிலி போல ஹிட்டாக்க விமர்சகர்கள் முயற்சித்தாலும் படத்திற்கு பெரிதாக வசூல் வரவில்லை. இதுவரை 3 கோடி ரூபாய் கூட முழுதாக வரவில்லை என்கின்றனர்.

இந்நிலையில், படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இந்த படத்துக்கு கிடைத்த விமர்சனங்கள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால், ஒரு சிலர், படத்தை ஸ்பாய்லர் செய்வதும், அதிகளவில் குறைகள் செய்து காலி செய்ய நினைப்பதும் ஏன் என்றே தெரியவில்லை.

படத்தின் நிறை குறைகளை சொல்ல விமர்சகர்களுக்கு நிச்சயம் உரிமை உள்ளது. ஆனால், எந்த எந்த படங்களுக்கு எப்படி எப்படி விமர்சனங்கள் சொல்வீர்கள், ஒரு 50 பேரோட விமர்சனத்தை பார்த்தேன். அதிலேயே ஒற்றுமையில்லையே, சினிமாவை வாழவும் வளரவும் வைக்க வேண்டியவர்கள் தான் விமர்சகர்கள். நீங்களே காலி பண்ணிடாதீங்க என பேசியுள்ளார்.

இப்படியொரு கதையை அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் தேர்வு செய்து நடித்துக் கொடுத்ததற்கு நன்றி. இதை விட இன்னமும் சிறப்பான ஒரு படத்தில் உங்களுடன் மீண்டும் இணைவேன் என்றார்.

Next Story