செல்ஃபி கேட்டு அசிங்கப்படும் ரசிகர்கள்… கோப முகம் காட்டும் பிரபல நடிகை… வைரலாகும் வீடியோக்கள்

Fans: பிரபலங்கள் இன்று பெரிய புகழை பெற்றுகொண்டு இருப்பதற்கு காரணம் ரசிகர்கள்தான். ஆனால் அவர்களிடம் சிலவற்றை தன்மையாக கூட சொல்லாமல் நடிகைகள் செய்யும் விஷயம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் வளர்ந்து கொண்டு வருவதற்கு அடையாளமாக அவரின் ரசிகர்கள் எண்ணிக்கை தான் தற்போது வரை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில பிரபலங்கள் மட்டும்தான் எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல் தங்கள் ரசிகர்களை கையாள்வதை பார்க்க முடிகிறது.

பிரபலங்களை பார்த்துவிட வேண்டும் அல்லது அவர்களுடன் புகைப்படங்களை எடுத்து விட வேண்டும் என ரசிகர்கள் நிறைய சாகச விஷயங்களையும் செய்தும் விடுகின்றனர். அதை சில பிரபலங்கள் சரியாக பொறுமையாக கண்டித்து அவர்களிடம் தன்மையாக சொல்லுவதையும் நாம் பார்க்க முடிகிறது.

ஆனால் சில நடிகர் மற்றும் நடிகைகள் அதற்கு கூட பொறுமை இல்லாமல் அவர்களிடம் கோபமாக பேசுவது தற்போது டிஜிட்டல் உலகத்தில் வீடியோக்களாக பதிவாகி ரசிகர்களிடம் வெளியாகி நிறைய கண்டனங்களை பெற்று வருகிறது. செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார், கறாராக பேசிய நடிகர் அஜித்குமார் என அவ்வப்போது சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோக்கள் வாடிக்கைதான்.

தற்போது அந்த இடத்தில் நடிகை பிரியங்கா மோகனிடம் பிடித்திருக்கிறார். தன்னிடம் செல்பி எடுக்க வரும் ரசிகர்களிடம் கோப முகம் காட்டி வருவது வீடியோக்களாக வெளி வந்து கொண்டிருக்கிறது. தற்போது, ரசிகர் ஒருவர் செல்பி கேட்க என்னை பாலோ செய்ய கூடாது என முறைத்துக் கொண்டே அவர் கண்டிப்புடன் கூறிய விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கு முன்னும் தன்னிடம் காரில் செல்பி கேட்ட ரசிகர்களிடம் என் கூட காரில் ஏறி விடுறிங்களா என அவர் கோபத்தில் கேட்டதும் வீடியோக்களாக வைரல் ஆகி வந்தது. பிரபலங்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் தனிமை வேண்டும் என கூறப்படுவது போல ரசிகர்களிடம் சொல்ல வேண்டியதை தன்மையாக சொன்னால் தற்போதைய இணைய உலகத்தில் பிரபலங்களும் தங்கள் பெயர்களை சரியாக தக்கவைக்க முடியும் என்பது தான் உண்மை.

பிரியங்கா மோகன் பதிவுக்கு : https://x.com/SiluvaM_/status/1839891067610771793


Related Articles
Next Story
Share it