நடந்துச்சு… நடந்துச்சு… அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபலம்… செம குஷியில் போட்ட பதிவு
Ajithkumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருப்பது குறித்து பிரபலம் ஒருவர் போட்டு இருக்கும் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித்குமாரின் அடுத்த திரைப்படம் ஆன விடாமுயற்சியின் டைட்டில் அறிவிப்பு நடந்தது. எப்போதும் இல்லாத திருநாளாக இந்த அறிவிப்பால் ரசிகர்கள் சந்தோஷமடைந்தனர். ஆனால், படத்தின் ஒரு அடி கூட நகரப்படாமல் இருந்தது.
பல மாதங்கள் பிரேக் எடுத்துக் கொண்ட நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் கடந்த வருட இறுதியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. இருந்தும் கால சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு பல நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இடைத்தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் முடிந்துள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தில் நடிகர் அஜித்துடன் முக்கிய வேடத்தில் நடிகர் பிரசன்னாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரசன்னா போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பதிவில், இந்த முறை தல அஜித்குமார் சாரின் படத்தில் எனக்கு இடம் கிடைத்துள்ளது. இது என் கனவுகள் நிஜமாகும் தருணம்.
மங்காத்தா முதல், எப்போது ஏகே சாரின் படங்கள் அறிவிக்கப்படும்போது, நான் அங்கு இருக்கவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். தற்போது அந்த நேரம் வந்துவிட்டது. நான் "குட் பேட் அக்லி"யில் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் இப்போது அதிகமாக கூற முடியாது, மன்னிக்கவும்.
என் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளேன். நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியும். அவர் என்னை போன்றவர்களை மிகுந்த அன்பாக நேசிக்கப்படுகிறார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.