NEEK ஆடியோ லாஞ்சில் இயக்குனர்களுக்கு நேர்ந்த அவமானம்!.. சொல்லி தெரிய வேண்டிய நிலைமையா?..

Actor Dhanush : தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களை கமிட் செய்து கொண்டு அடுத்து எந்த திரைப்படத்தில் நடிப்பது என்று தெரியாத அளவிற்கு மிகவும் பிஸியாக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராயன். இந்த திரைப்படத்தை இவரே இயக்கி நடித்திருந்தார். இப்படம் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த நிலையில் தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
தனுஷ் இயக்கம்: ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. இதற்காக படத்தின் சூட்டில் பிஸியாக இருந்து வருகின்றார்.
NEEK திரைப்படம்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் தனுஷ் தனது அக்கா மகனான பவிசை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ் வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்திருக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். படத்திலிருந்து வெளியான பாடல், டீசர், ட்ரைலர் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படம் நிச்சயம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NEEK ஆடியோ லான்ச்: இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். படத்தில் நடித்த இளம் நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து பல்வேறு youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சை முத்து, விக்னேஷ் ராஜா, அருண் விஜய் உள்ளிட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இயக்குனருக்கு நேர்ந்த அவமானம்: இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென்று ரசிகர்கள் கூட்டம் அதிகமாக தொடங்கி இருக்கின்றது. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்வரிசையில் நடிகர், நடிகைகள் மற்றும் கெஸ்ட்களை அமர வைத்துவிட்டு ரசிகர்கள் அனைவரையும் முதல் மாடியில் சென்று அமருமாறு கூறி இருக்கிறார்கள் .
அப்போது முன்வரிசையில் தமிழரசன் பச்சை முத்துவும் விக்னேஷ் ராஜாவும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அவர்களை யாரென்று தெரியாததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களையும் மேலே சென்று அமர கூறி இருக்கிறார்கள்.
அதன் பிறகு சிலர் இவர்கள்தான் தனுஷை வைத்து அடுத்த திரைப்படங்களை இயக்கப் போகிறவர்கள் என்று கூறி இருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை கொடுத்தாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு அறிமுகம் இல்லாத காரணத்தால் இப்படி ஒரு அவமானம் நேர்ந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.