இப்போ இது நடக்கலை… இட்லிகடை படத்தில் நடிப்பதை மறுத்த முக்கிய பிரபலம்!..

Idlykadai: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என பிரபல நடிகர் தெரிவித்திருக்கிறார்.

நடிகராக கோலிவுட்டிற்குள் வந்த தனுஷ் தற்போது இயக்குனராகவும் தன்னுடைய ஆளுமையை காட்டி வருகிறார். அவரின் இயக்கத்தில் வந்த பா பாண்டி மற்றும் ராயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தற்போது இள நடிகர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் ரசிகர்களிடம் வைரல் ஹிட் அடித்திருக்கிறது. தொடர்ந்து குபேரன் உள்ளிட்ட திரைப்படங்களிடம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இயக்கத்தில் நான்காவது திரைப்படத்தை தனுஷ் தொடங்கி இருக்கிறார். இப்படத்திற்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் 52 ஆவது படமாக இப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

வில்லன் வேடத்தை நடிகர் அருண் விஜய் ஏற்று இருக்கிறார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் சூட்டிங் தற்போது தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது.

மேலும் தனுஷின் தம்பி வேடத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதற்கு தற்போது அசோக் செல்வன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நான் தனுஷ் சாரின் ரசிகன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அவருடன் வருங்காலத்தில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் நான் தற்போது இட்லி கடை திரைப்படத்தில் நடிக்கவில்லை என விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles
Next Story
Share it