யாருக்கும் ஆண்மையில்லை. சின்மயிக்கு நடந்தது துரோகம்!. பொங்கும் பிரபலம்!...

by MURUGAN |   ( Updated:2025-06-04 12:22:10  )
chinmayi
X

Chinmayi: அரசியலை போலவே சினிமாவில் ஒருவரை பிடிக்காவிட்டால் ஓரம் கட்டிவிடுவார்கள். அதாவது சினிமா உலகிலும் அரசியல் உண்டு. சினிமா துறைக்கு வரும் பெண்கள் பல வருடங்களாகவே பாலியல் தொல்லைகளை சந்தித்து வருகிறார்கள். வாய்ப்பு வேண்டுமெனில் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்பதுதான் கீவேர்ட். இதற்கு ஒப்புக்கொண்டால் வாய்ப்பு. இல்லையென்றால் வாய்ப்பு கிடைக்காது.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால்தான் வாய்ப்பு என்றால் வாய்ப்பே தேவையில்லை என பல பெண்கள் சென்றுவிடுகிறார்கள். சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வாய்ப்புக்காகவும் வேறு வழியில்லாமல் சம்மதம் சொல்கிறார்கள். சினிமாவில் உள்ள எல்லா துறைகளிலும் இது நிகழ்கிறது. ஆனால், இதிலெல்லாம் சிக்காமல் சினிமாவில் நுழைந்து சாதித்து காட்டிய பெண்கள் பலரும் இருக்கிறார்கள்.

இப்போது பெண் இயக்குனர்கள் கூட வந்துவிட்டார்கள். ஆனால், பெண்கள் மீதான பாலியல் சீண்டல் என்பது இன்னமும் திரையுலகில் குறையவில்லை. சில வருடங்களுக்கு முன்பு பின்னணி பாடகி சின்மயி சிலர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் கூறி அதிர வைத்தார். அவரை தொடர்ந்து பல பெண்களும் தாங்களும் பிரச்சனைகளை சந்தித்ததாக தைரியமாக சமூகவலைத்தளங்களில் மீ டூ என்கிற ஹேஷ்டேக்கில் சொன்னார்கள்.

சினிமா உலகில் இருக்கும் பலரும் இதில் சிக்கினார்கள். அதில் பெரும்பாலானவர்கள் அதை மறுத்தார்கள். டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் மற்றும் நடிகர் ராதாரவி இதில் கோபமடைந்தார். எனவே, சின்மயி ஆண்டு சந்தாவை செலுத்தவில்லை என ஏதேதோ சப்பைக்கட்டு கட்டி சினிமயி சினிமாவில் பாடவும், பின்னணி குரல் பேசவும் தடை விதித்தார்.


இது நடந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுவரை அந்த தடை நீக்கப்படவில்லை. இந்நிலையில்தான் தக் லைப் பட புரமோஷன் விழாவில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் பலராலும் சிலாகிக்கப்பட்டது. அதோடு, இவ்வளவு இனிமையாக பாடும் சின்மயி மீதான தடையை நீக்க வேண்டும் என சின்மயிக்கு ஆதரவாக பலரும் கிளம்பினார்கள். இதுபற்றி ராதாரவியிடம் கேட்டதற்கு ‘சின்மயி பற்றி இப்போது பேசுவது வேஸ்ட்’ என நக்கலாக பதில் சொன்னார்.

இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‘ என்னுடைய ஆதரவு சின்மயிக்குதான். அவங்களுக்கு தமிழ் திரைப்பட சங்கம் பண்ணது துரோகம். அநியாயம், அநீதி. அவங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் எதிர்க்காமல் இருக்கலாம். அவங்கள் மீதே தவறு சொல்லி அவங்களை வெளியே அனுப்பிட்டீங்க. நீங்கள் எல்லாம் ஆம்பளைகள்தான்?.. கோழைகளும் ஆண்மையற்ற ஆண்களும் சங்கத்தில் உட்கார்ந்து இருப்பதுதான் இதற்கு காரணம். தப்பு பண்ணிட்டு நல்லா இருக்காங்க. உண்மையை சொன்னவருக்கு இந்த தண்டனை’ என பொங்கியிருக்கிறார்.

Next Story