ஸ்கெட்ச் போட்ட ஆர்த்தி.. வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஜெயம் ரவி!.. விடாது கருப்பு!...

ஜெயம் ரவி, ஆர்த்தி விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. வலைதளத்தை எங்கு திறந்தாலும் இதே செய்தி தான். இப்போது தன்னை ஆர்த்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக போலீசில் ஜெயம் ரவி புகார் அளித்ததாக கூறப்படும் விவகாரம் திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஒரு கட்டத்தின் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் தன்னுடைய கார் மற்றும் உபயோகப் பொருள்களை மீட்டுக் கொடுங்கள் எனவும் ஜெயம் ரவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜெயம் ரவி இந்த விஷயம் எப்படியும் வெளியே தெரிந்து விடும் என முந்திக்கொண்டு அறிக்கையை வெளியிட ஆர்த்தி தனக்கு எதுவுமே தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.

ஜெயம் ரவியின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் அவரது பனையூர் பங்களாவுக்குச் சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது. ஆர்த்தியிடமும் சென்று போலீசார் விஷயம் குறித்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆர்த்தியோ இது அவரது வீடு. அவர் எப்போது வேணுமானாலும் வரலாம் என சொல்ல போலீஸே குழம்பி விட்டதாம். இது குறித்து ஜெயம் ரவியிடம் சொன்ன போலீஸ் சட்டப்படி வழக்கை முடித்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்களாம்.

இப்படிப்பட்ட நிலையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்டு ஜெயம் ரவி தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு காரையும் எடுத்துக் கொண்டு பனையூர் பங்களாவுக்குச் சென்று விட்டாராம்.

மூத்தமகனிடம் ரவி ஏற்கனவே எல்லா விஷயங்களையும் சொல்லி விட்டாராம். அப்பாவுடன் கொஞ்சநாள் இருக்கலாம் என ஆர்த்தியும் மூத்தமகனிடம் சொல்லிவிட்டாராம். ஆனால் ஜெயம் ரவியோ ஆர்த்தியுடனான விவாகரத்துல இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளாராம்.


ஜெயம் ரவி, ஆர்த்தி பற்றிய பேச்சு தான் எங்கு பார்த்தாலும் பரவலாகப் போய்க்கொண்டு இருக்கிறது. பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜெயம் ரவி. அவரைப் பற்றி சினிமாவில் இதுவரை எந்தக் கிசுகிசுவுமே வராமல் இருந்தது. ஆனால் எல்லாத்துக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வந்து பூதாகரமாக சேர்ந்துவிட்டதே இந்த விவகாரம் என திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles
Next Story
Share it