இத்தனை நாளா ஆர்த்தியிடம் தான் இருந்ததா? ஜெயம் ரவியின் அதிரடி ஆக்‌ஷன்

ஜெயம் ரவியின் விவாகரத்து சம்பவம் திரையுலகையே உலுக்கியிருக்கிறது. கோலிவுட்டில் ஒரு மதிப்பும் மரியாதையும் உள்ள குடும்பமாக ஜெயம் ரவியின் குடும்பம் இருந்து வருகிறது. அப்பா அந்த காலத்தில் இருந்தே ஒரு எடிட்டராக இருந்தவர். அண்ணன் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார். ஒரு பாரம்பரியம் கலாச்சாரத்தில் மூழ்கிய குடும்பமாகவே ஜெயம் ரவியின் குடும்பம் பார்க்கப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்தவர் ஜெயம் ரவி. இவர்கள் திருமணத்திற்கு ஜெயம் ரவியின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கட்டினால் ஆர்த்தியைத்தான் கட்டுவேன் என அடம்பிடித்து திருமணம் செய்து கொண்டவர்தான் ஜெயம் ரவி. இவர்கள் திருமண வாழ்க்கை அனைவரையும் பொறாமை பட வைக்கும் அளவுக்கு இருந்தது.

ஹீரோயினே தோற்றுப்போகும் அளவிற்கு ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அழகு. அவருடைய ஸ்டைல், அழகு என ஏன் இவர் சினிமாவில் நடிக்க வில்லை என்றுதான் கேட்டார்கள். இவர்களுக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தன் மூத்த மகனை கூட ஜெயம் ரவி டிக் டிக் டிக் படத்தில் தன்னுடன் நடிக்க வைத்திருப்பார் ஜெயம் ரவி.

அவ்வப்போது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருக்கும் மாதிரியான ஜெயம் ரவியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும் போது என்ன ஒரு குடும்பஸ்தன் என பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். குழந்தைகளிடம் ஒரு அப்பாவாக மிகுந்த அன்புடன் இருந்து வந்தார்.

ஆனால் இவர்களுக்குள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஜெயம் ரவி. இதற்கிடையில் பாடகி கெனிஷாதான் இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவியது. ஆனால் ஜெயம் ரவி எங்கள் பிரச்சினையில் கெனிஷாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என பத்திரிக்கையாளர்களிடம் வேண்டுகோளாக வைத்தார்.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் இன்ஸ்டா அக்கவுண்டை இத்தனை நாள்களாக அவர் மனைவி ஆர்த்திதான் கவனித்து வந்தாராம். இந்த பிரச்சினைக்கு பிறகு மெட்டாவை தொடர்புகொண்டு தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திருக்கிறாராம் ஜெயம் ரவி. அவர் கண்ட்ரோலுக்கு இன்ஸ்டா வந்த பிறகு தன் மனைவியுடன் இருந்த புகைப்படங்களை எல்லாம் அழித்து விட்டாராம் ஜெயம் ரவி.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it