தெரியாதுனு சொல்றது பொய்… பாடகியுடன் மார்பிங் கூட செய்வாங்க… முதன்முறையா மனம் திறந்த ஜெயம்ரவி
JayamRavi: தன்னுடைய பிறந்தநாளுக்கு முன்னர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவிக்க அடுத்த சில நாட்களில் எனக்கு இந்த விஷயம் குறித்து எதுவும் தெரியாது. என்னை கலந்து கொள்ளாமல் ரவி விவாகரத்தை அவருடைய சுயநலத்திற்காக எடுத்திருப்பதாக அறிக்கை வெளியிட விஷயம் பரபரப்பானது.
பல யூகங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஜெயம் ரவி முதல் முறையாக தன்னுடைய விவாகரத்து குறித்த விஷயங்களை வெளியில் கூறியிருக்கிறார். ஆர்த்தியுடன் விவாகரத்து என்பது எனக்கும் வருத்தமான செய்திதான். ஆனால் இது என் வாழ்வின் வேகத்தடை என நினைத்துக் கொள்கிறேன்.
நான் விவாகரத்து கோரி ஒன்றரை மாதங்களுக்கு கோட் படியேறி விட்டேன். அது குறித்து தெரியாது எனக்கு கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. இரண்டு முறை என் தரப்பில் இருந்து அவர்களுக்கு நோட்டீஸ் சென்றதும், அதை அவர்கள் பெற்றுக் கொண்டதும் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் வீட்டிலே எங்களுக்கு சமாதான பேச்சுவார்த்தை நடக்கவும் செய்தது. ஆனால் தனக்கு எதுவுமே தெரியாது என அவர் கூறுவது வேடிக்கைதான். அது மட்டும் அல்லாமல் என்னை பாடகியுடன் இணைத்து பேசுவது அவர்களுக்கு தான் அசிங்கம். அந்தப் பெண்ணுக்கு அப்பா அம்மா கிடையாது. அந்த பெண் ஒரு சைக்காலஜிஸ்ட். நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார்.
அவருடன் இணைந்து மன அமைதிக்கென மையம் உருவாக்க முடிவெடுத்திருந்தேன். அதை கெடுக்கும் வேலையாக தான் பார்க்கிறேன். நாளை என்னையும் அவரையும் மார்பிங் செய்து கூட படங்கள் வெளியிடலாம். வேறொரு பெண்ணுடன் என்னை இணைத்து பேசினர். அவர் திருமணம் முடிந்து விட்டதால் தற்போது இன்னொரு பெண்ணுடன் பேசுகின்றனர். நான் என் மகன்களை விட்டு எங்கும் செல்லவில்லை.
அமைதியாக இருக்கிறேன். இதை சட்டபூர்வமாக எதிர்கொள்வேன். என் கை கால்களை உடைத்துக் கொண்டு உருவாக்கிய சினிமா கேரியரை யாராலும் அழிக்க முடியாது அதற்கு நான் விடவும் மாட்டேன். சீக்கிரம் என் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும். தவறாக பேசுபவர்களுக்கு சாணியடி கிடைக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.