tvk vijay
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையின் போதும் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் விஜய் கரூரில் தனது தேர்தல் பரப்புரையை வழங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 39-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர்.
இந்நிலையில் இதைப்பற்றி மூத்த பத்திரிகையாளரும் சினிமாவிமர்சகருமானன செய்யாறு பாலு கூறுகையில், “விஜயின் அரசியலை கரூர் சம்பவம் கருவருக்க வந்துள்ளது. தற்போதைக்கு இது விபத்து என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையான விபத்துதானா? இல்லையென்றால் இதற்குப்பின் வேறு ஏதும் சதி திட்டங்கள் நடந்திருக்கிறதா? என்று போக போக தான் தெரியும்”.
”இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசில் தான். திட்டமிடுதல் தவறும் பொழுது தான் தேவையற்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. விஜய் அரசியலில் சரசரவென ஏணிப்படியில் ஏறி சென்றார். இந்த கரூர் சம்பவம் அவரைப் பொத்தென்று கீழே இறக்கி விட்டது. இதனால் இனி வரப்போகும் சுற்றுப்பயணமும் தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டதாக விஜய் தரப்பு அறிவித்துள்ளது”.
”இதேபோல உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்ல வேண்டும் என்றால் ipl போட்டியில் rcb அணி வெற்றி பெற்ற பின்பு அந்த அணி பெங்களுருவில் ஒரு roadshow செய்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி சில உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றது. ஏன் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர்”.
சரியான திட்டமிடுதல் இல்லாதது மற்றும் அரசியல் களத்தில் விஜய்க்கு என்ன செய்ய வேண்டும் என்று எடுத்து சொல்ல முன் அனுபவம் கொண்ட ஆட்கள் இல்லாதது தான் காரணம் என்று செய்யாறு பாலு விமர்சித்துள்ளார்.
தனுஷ் நடித்த…
Karur Vijay:…
Karur: நடிகர்…
Ajith: தமிழ்…
TVK Vijay:…