படத்த வாங்கவே ஆள் இல்ல.. சம்பளம் மட்டும் இவ்ளோ வேணுமா? தாங்கமுடியாத கவின் அட்ராசிட்டி

kavin
தமிழ் திரை உலகில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் கவின். அவர் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக லிப்ட் மற்றும் டாடா ஆகிய இரு திரைப்படங்கள் அமைந்தன. அவருடைய கெரியரிலேயே இந்த இரு படங்கள்தான் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்கள். அதன் பிறகு வந்த பெக்கர் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
ஆனால் அந்த படத்தில் ஒரு பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில் தத்ரூபமாக நடித்திருந்தார் கவின். அந்த படத்தின் டிரைலர் எல்லாம் வெளியாகி பெரிய வரவேற்பில் இருந்தது. ஆனால் படத்தை பார்த்த அனைவரும் கடுமையாக விமர்சித்தனர். படமும் சரியாக போகவில்லை. இந்த நிலையில் கவின் தற்போது அவருடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பெக்கர் திரைப்படத்திற்கு பிறகு கவின் அடுத்ததாக கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்த படத்திற்கு அவர் 5 கோடி சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கிஸ் திரைப்படத்தை வாங்கவே எந்த ஒரு விநியோகஸ்தர்களும் முன் வரவில்லையாம். அதில் இவர் கேட்கும் இந்த சம்பளம் எப்படி கட்டுபிடியாகும் என கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.
இதற்கெல்லாம் காரணம் தயாரிப்பாளர்கள் தான் என்றும் ஒரு சில பேர் கூறி வருகிறார்கள். கேட்கிற சம்பளத்தை எல்லாம் தூக்கிக் கொடுத்து விட்டு இப்போது அந்த ஹீரோ இவ்வளவு கேட்கிறார் இந்த ஹீரோ இவ்வளவு கேட்கிறார் என்றால் யார் மீது குற்றம் சொல்வது என கூறி வருகிறார்கள். இது மட்டும் அல்ல கவின் இவ்வளவு அதிக சம்பளம் கேட்கிறார் என்று தெரிந்ததும் அசோக் செல்வனும் அவருடைய சம்பளத்தை உயர்த்தி கேட்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.
அசோக் செல்வன் ஏற்கனவே போர்த்தொழில் என்ற ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். இப்போது தக் லைப் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் தன்னுடைய சம்பளத்தையும் கோடி அளவில் கேட்பதாக தெரிகிறது. பெரிய பெரிய நடிகர்கள்தான் ஒவ்வொரு படத்திற்கு சம்பளத்தை அதிகரித்து வந்த நிலையில் இப்போது அடுத்து வளரும் இளம் தலைமுறை நடிகர்களும் அவர்களுடைய சம்பள விஷயத்தில் கறார் காட்ட ஆரம்பித்து விட்டனர்.