தியேட்டர் காலி!. குபேரா ஹிட்டுக்கு காரணம் தனுஷ் இல்ல!.. பர்பாமன்ஸ் பண்ணியும் வீணாப்போச்சே!...

by MURUGAN |   ( Updated:2025-06-26 02:27:41  )
kubera
X

Kubera: இப்போதெல்லாம் பேன் இண்டியா திரைப்படங்கள் அதிகரித்துவிட்டது. அதாவது ஒரு மொழியில் எடுத்து வேறு சில மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு கல்லா கட்டுவதுதான் பேன் இண்டியா. இதை துவக்கி வைத்தது பாகுபலி படம்தான். தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது.

எனவே, பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப், காந்தாரா, புஷ்பா 2, கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர், சலார், அனிமல் போன்ற படங்களும் பேன் இண்டியா படங்களாக வெளியாகி வசூலை அள்ளியது. இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான படம்தான் குபேரா. தெலுங்கு சினிமா இயக்குனர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியானது. தமிழகத்தில் குபேரா தனுஷ் படமாகவும், ஆந்திராவில் நாகார்ஜுனா படமாகவும் பார்க்கப்பட்டது. தமிழகத்தில் முதல் 3 நாட்கள் குபேரா படத்திற்கு ஓரளவுக்கு வசூல் இருந்தது. ஆனால், 4ம் நாள் முதல் தியேட்டர்கள் காற்று வாங்க துவங்கிவிட்டது.


ஆனால், ஆந்திராவில் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. 6 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தொட்டுவிட்டதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அதாவது ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் மட்டுமே இந்த வசூல். தமிழகத்தில் எல்லா தியேட்டர்களிலும் இப்படம் காத்து வாங்குகிறது. எனவே, ஆந்திர ரசிகர்கள் குபேரா படத்தின் வெற்றிக்கு காரணம் நாகார்ஜுனா மற்றும் சேகர் கம்முலா மட்டுமே என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தனுஷுக்காக குபேரா படம் ஓடுகிறது என்றால் தமிழ்நாட்டில் இப்படம் நல்ல வசூலை பெற்றிருக்க வேண்டும். எனவே, ஆந்திர சினிமா ரசிகர்கள் சொல்வது உண்மைதான் என ஏற்றுக்கொள்ள வேண்டும். குபேரா சக்சஸ் மீட் ஆந்திராவில் நடந்தபோது அதில் பேசிய நாகார்ஜுனா ‘துவக்கத்தில் இது தனுஷ் படமாக இருந்தாலும்.. ஒரு கட்டத்தில் நான் ஹீரோவாக மாறிவிட்டேன்’ என பேசியிருந்தார். அவரும் இதை புரிந்துகொண்டுதான் பேசியிருக்கிறார் என பார்க்கப்படுகிறது.

தனுஷுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என சிரஞ்சீவியே பேசியிருந்தார். தனுஷ் அந்த அளவுக்கு பர்ஃபாமன்ஸ் செய்திருந்தாலும் தமிழகத்தில் இப்படத்திற்கு வரவேற்பு இல்லாமல் போய்விட்டது.

Next Story