ஜெயம் ரவிக்கு சரியான பதிலடி கொடுத்த குஷ்பூ! பின்ன எல்லாத்துக்கும் அவங்கதான காரணம்

நடிகை குஷ்பூ இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் பதிவை பார்த்த அனைவரும் ஒரு வேளை ஜெயம் ரவி ஆர்த்தி இவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை பற்றி தான் குஷ்பூ மறைமுகமாக இந்த பதிவை போட்டிருக்கிறாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அவர் பதிவிட்ட பதிவு இதோ: தன் குழந்தையின் தாயை மதிப்பது வாழ்க்கையில் இன்றியமையாதது என்பது கிடையாது. அது அடிப்படை. அந்த மரியாதை இல்லாமல் ஒரு மனிதன் மற்றவர்களின் மரியாதையை பெறவோ அல்லது வாழ்க்கையில் உண்மையிலேயே செழிப்பாக வாழவோ முடியாது.

ஒரு தாயை குறிப்பாக உன்னை நேசித்து நம்பி வந்த ஒருவரை அவமரியாதை செய்வது வருத்தம் அளிக்கிறது மற்றும் இதயத்தை கனமாக்கி இருக்கிறது. இது ஒரு இரக்கமற்ற நிலைப்பாடாக தெரிகிறது. ஒரு உண்மையான மனிதன் தன்னை உயர்த்துவதற்கு முதலில் தன் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்பதை அறிய வேண்டும்.

அன்பு அசையக்கூடியது. ஆனால் மரியாதை என்பது இதயங்களையும் ஆன்மாக்களையும் ஒன்றாக இணைக்கும் நிலையானது. ஒவ்வொரு நாளும் சரியானதாக இருக்காது. உங்களுடன் நிற்பவர்களை மதிப்பதும் உங்கள் உலகத்தை உருவாக்கும் குடும்பத்தை போற்றுவதும் தான் உண்மையான பலம்.

இது ஒரு நீடித்த அன்பை மட்டும் பற்றியது கிடையாது. ஒரு அசைக்க முடியாத மரியாதையும் கூட. இது காலத்தால் கூட உடைக்க முடியாத பிணைப்புகளை உறுதிப்படுத்துகிறது. இப்படி பல விஷயங்களை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குஷ்பூ பதிவிட்டு இருக்கிறார்.

திடீரென குஷ்பூ போட்ட இந்த பதிவால் ரசிகர்கள் இது நிச்சயமாக ஜெயம் ரவிக்காக தான் போட்டிருப்பார் என கூறி வருகிறார்கள். ஏனெனில் முதன் முதலில் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே காதல் மலர காரணமாக இருந்தவர் குஷ்ப தான் என பலருக்கும் தெரியும். அதனால் தான் ஆர்த்தியின் பக்கம் இருந்து அவருடைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு ஜெயம் ரவிக்கு எதிராக இந்தக் கருத்தை போட்டு இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it