லீக் பண்ணிய நடிகர்கள்!.. லீயோ மாதிரி ஆயிடக்கூடாது!.. டென்ஷனில் வேலை பார்க்கும் லோகேஷ்!...

by MURUGAN |
coolie
X

Coolie: 5 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்கள் மூலம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறினார். கேங்ஸ்டர் கதையில் பக்கா ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவரின் ஒரு படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இவரின் அடுத்த படத்திலும் வருவதை ரசிகர்கள் எல்.சி.யூ என அழைக்கிறார்கள். ஏனெனில், ஒரு புதுவிதமான.. ரசிகர்கள் இதுவரை பார்த்திராத இருண்ட உலகை லோகேஷ் காட்டுகிறார்.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.


தனது படம் பற்றி எந்த தகவலும் வெளியே கசிந்துவிடக்கூடாது என பெரும்பாலான இயக்குனர்கள் நினைப்பார்கள். லோகேஷும் அப்படித்தான். ஏனெனில் சஸ்பென்ஸ் இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால், அமீர்கான், நாகார்ஜுனா போன்றவர்கள் கூலி படம் பற்றி ஊடகங்களில் நிறைய பேசிவிட்டார்கள்.

கூலி படத்தில் வில்லனாக நடிக்கிறேன்.. லோகேஷ் என்னை புலி மாதிரி நடந்து வர சொன்னார் என லோகேஷ் சொல்ல, அமீர்கானும் ஒருபக்கம் கூலி படத்தில் இவ்வளவு நேரம் நான் வருவேன் என்றெல்லாம் சொல்லிவிட்டார். லோகேஷ் லியோ படத்தை இயக்கியபோது படத்தின் மீது அதிகப்படியான ஹைப் இருந்தது. அதுவே, படத்திற்கு கலவையான விமர்சனம் வர காரணமாகிவிட்டது.

அதனால்தான் கூலி மீது எந்த ஹைப்பும் வந்துவிடக்கூடாது என பார்த்துக்கொண்டார் லோகேஷ். ஆனால், நாகார்ஜுனாவும், அமீர்கானும் அதை கொஞ்சம் உடைத்துவிட்டனர். இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும் என்கிற டென்ஷனில் இருக்கிறாராம் லோகேஷ். எனவே, படத்தை வெற்றிப்படமாக்கிவிட வேண்டும் என்கிற முனைப்பில் மிகுந்த கவனத்துடன் வேலை பார்த்து வருகிறாராம்.

Next Story