ஹீரோக்களை மட்டும் கவனிக்கிறீங்களே… நடிகைனா மட்டும் தக்காளி தொக்கா? வெளுத்துகட்டும் மாளவிகா!..

Malavika: நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய பேட்டிகளில் பேசும் சில விஷயங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் அந்த வகையில் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் குறித்து அவர் பேசியிருக்கும் ஒரு விஷயம் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய பேட்டி ஒன்று நடிகை ஒருவர் சாகும் தருவாயில் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்திருந்தது பார்க்கவே வித்தியாசமாக இருந்தது என பேசியிருப்பார். அவர் கூறியதை வைத்து பார்த்தபோது இறைவன் திரைப்படத்தில் நடிகையின் நயன்தாராவை தான் அவர் கூறினார் என ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் உடன் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான விஷயம் குறித்து பேசியிருக்கிறார். திருமண விழாக்களில் பரிசு கொடுக்கும் பழக்கம் தென்னிந்திய பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. அதுபோல ஒரு படம் வெற்றி பெற்றால் ஹீரோக்களுக்கு மட்டும் விலையுயர்ந்த கார், நகை உள்ளிட்டவற்றை தயாரிப்பாளர்கள் பரிசாக கொடுக்கின்றனர்.

அந்த சமயங்களில் நடிகைகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை.. ஆனால் இதுவே ஒரு படம் தோல்வியை தழுவினால் அதற்கு அந்த நடிகைகள் தான் காரணமாக கூறப்படுகின்றனர். அவர்களின் அதிர்ஷ்டம் குறித்த கேள்வி எழுப்பப்படுகிறது. இதனால் அவர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

ஆனால் நடிகர்களுக்கு அப்படி இல்லை. அவர் ஒரு படத்தில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு தானாக மரியாதையும் புகழும் வந்து விடுகிறது. இது தற்போது தென்னிந்திய சினிமாக்களில் தான் அதிகம் காணப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார். தங்கலான் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மாளவிகா தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it