தனுஷ் - மாரிசெல்வராஜ் இணையும் சரித்திர படம்!.. மரண மாஸ் அப்டேட்டா இருக்கே!....

பரியேறும் திரைப்பம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் என்னென்ன பிரச்சனையை சந்தித்தார்கள், இன்னும் சந்தித்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை முறை, காதல் என எல்லாவற்றையும் தனது படங்களில் பதிவு செய்து வரும் இயக்குனர் இவர்.

இதை பரியேறும் பெருமாள் படத்திலேயே அழுத்தமாக பதிவு செய்திருந்தார். அதன்பின், தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் பேருந்துகள் நிற்காமல் போகும் அரசியல் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.

அதன்பின் உதயநிதியை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலில் பதவியில் இருந்தாலும் எப்படி நடத்தப்படுவர்கள் என்பதை தெளிவாக காட்டியிருந்தார் மாரி செல்வராஜ். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றது.

அதன்பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் வாழை. தனது சிறு வயதில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் வாழை தோப்பில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களின் காதல், பள்ளி அனுபவம் ஆகியவற்றை படம் போட்டு காட்டியிருந்தார்.

இப்போது சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார். இது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கபடி வீரரின் கதை ஆகும். இதற்கிடையில், அடுத்து தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கபோவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் ‘அது ஒரு சரித்திர கதை. அது எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். அந்த கதையை பெரிய அளவில் எடுக்க வேண்டும். குறைந்தது அந்த படத்தை எடுத்து முடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகும். எனவே, அது அமையும் போது அந்த படம் உருவாகும்’ என சொல்லி இருக்கிறார்.

Related Articles
Next Story
Share it