ஒரு செங்கல கூட உருவ முடியாதுனு சொன்னீங்க தனுஷ்! மொத்தத்தையும் உருவிட்டாரே நாகர்ஜூனா

nagarjuna
தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா ,ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா.. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் உருவானது. அதன் பிறகு கன்னடம் மலையாளம் ஹிந்தி என மூன்று மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. அதனால் அவருக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்ட நிலையில் பல விருதுகளை அள்ளி குவித்த சேகர் கம்முலா இயக்குனருடன் அவர் இணைகிறார் என்று தெரிந்ததும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அவர் நடித்த வாத்தி, நானே வருவேன் ராயன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் ஓரளவு வரவேற்பை பெற்றது.
கடைசியாக அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் மோசமான தோல்வியை தழுவியது. அதனால் கண்டிப்பாக ஒரு வெற்றியை கொடுத்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தனுஷ் சேகர் கம்முலா உடன் இணைந்தார். ஏற்கனவே வாத்தி என்ற நேரடி தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார் தனுஷ். இரண்டாவதாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் திரைப்படம் தான் குபேரா.
ஆனால் இந்த படமும் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. மோசமான திரைக்கதை இரண்டாம் பாதி மிகவும் ஸ்லோவாக இருக்கிறது என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தனுஷின் நடிப்புதான் படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாக்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது .
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு நாகார்ஜுனா பேசிய ஒரு கருத்து என்னவெனில் இது நாகார்ஜுனா படமோ தனுஷ் படமோ ராஷ்மிகா மந்தனாவின் படமோ கிடையாது. சேகர் கம்முலாவின் படம் என குறிப்பிட்டிருந்தார். ரிலீசுக்கு பின்பு இன்று அவர் பேசும் பொழுது இந்த படத்தில் ஹீரோவாக நான் கருதப்பட்டேன். தீபக் என்ற கேரக்டரை சுற்றியே தான் படம் நகருகிறது.
kubera
ஆரம்பத்திலிருந்து படம் முடியும் வரை தீபக் கேரக்டரை மையப்படுத்தி தான் படம் சுற்றிக்கொண்டு வந்தது. அதனால் குபேரா படத்தின் ஹீரோ நான் என எனக்கு தோன்றியது என்று ஒரு பேட்டியில் பேசுகிறார் நாகர்ஜுனா. உடனே அந்த கிளிப்பிங்ஸை எடுத்து நம்மூர் ஆட்கள் அது எப்படி எல்லா கிரெடிட்சையும் அவரே எடுத்துக்கொள்ள முடியும். படத்தில் தனுஷின் ஆத்மார்த்தமான நடிப்பு அவருடைய பெர்பாமன்ஸ் எந்த அளவுக்கு படத்தை உயர்த்தியது என அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கையில் நாகார்ஜுனா இப்படி பேசலாமா என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.