ஏ.ஆர்.ரகுமானாலதான் என் வாழ்க்கையே போச்சி!.. புலம்பும் பிரவீன் காந்தி!....

AR Rahman: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே அசத்தலான இசையை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். அவரின் இசையில் இருந்த ஒலி புதிதாக இருந்தது. வெஸ்டர்ன் இசை என்றாலும் கேட்க ரம்மியமாக இருந்தது. முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார்.

அதன்பின் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் 2 போன்ற படங்களில் ரஹ்மான் கொடுத்த இசை அவரை உச்சிக்கு கொண்டு சென்றது. அப்படியே ஹிந்தி சினிமாவுக்கும் போய் கலக்கினார். ரங்கீலா படத்தில் ரஹ்மான் போட்ட இசைக்கு நடனமைக்க முடியாமல் நடன இயக்குனர்கள் திணறினார்கள்.

ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராகவும் ரஹ்மான் மாறினார். மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்கள் ரஹ்மானை மட்டுமே நம்பி இருந்தார்கள். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் கலக்கினார் ரஹ்மான். ஹிந்தியிலும் உச்சத்திற்கு போனார்.

ரஜினி, கமல், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்தார். இப்போது அனிருத் அவரின் இடத்தை பிடித்துவிட்டாலும் அவ்வப்போது ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். ராயன் படத்தில் அவர் கொடுத்த ‘உயிரே நீதானே’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ரஹ்மான் மீது புகார் ஒன்றை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரவீன் காந்தி. இவர் ரட்சகன், ஜோடி உள்ளிட்ட சில பட படங்களை இயக்கியவர். மேலும், சமூகவலைத்தளங்களிலும், டிவி விவாத நிகழ்ச்சிகளிலும் ரஜினிக்கு ஆதரவாக பேசி வருபவர். இவர் இயக்கிய ரட்சகன் படத்தில் ரஹ்மான் அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார்.



அதிக பட்ஜெட்டில் உருவான அப்படம் ஓடவில்லை என்றாலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரவீன் காந்தி ‘ஏ.ஆர்.ரஹ்மான்னாலதான் என் வாழ்க்கையே போச்சி. ரட்சகன் படத்தின் ஹிந்தி உரிமையை அவர் எனக்கு கொடுத்திருந்தால் இந்நேரம் ஹிந்தியில் நான் பெரிய இயக்குனராக இருந்திருப்பேன்’ என சொல்லி இருக்கிறார்.




Admin
Admin  
Related Articles
Next Story
Share it