செல்பி கேட்ட ரசிகரிடம் சீறிய பிரியங்கா மோகன்... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!...
பெங்களூரை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். கன்னட படங்களில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனவர். தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மூலம் பிரியங்கா தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷுக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பொருத்தமாக ஜோடியாக இருந்தார் பிரியங்கா. டாக்டர் படம் ஹிட் அடிக்கவே அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார் பிரியங்கா. அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது.
சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் டிக் டாக், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்தார். இதில், கேப்டன் மில்லர் படத்தில் வித்தியாசமான வேடம் கிடைத்தது. தெலுங்கில் நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த ஹிட் படமான சர்போதா சனிவரம் படத்திலும் அம்மணிதான் கதாநாயகி.
அதோடு, ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் மற்றும் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் பிரியங்கா நடித்திருக்கிறார். சமீபத்தில் பிரதர் படத்தில் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பிரியங்கா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து அவர் கிளம்பும்போது ரசிகர்கள் அவரிடம் செல்பி கேட்டனர். அப்போது அவர் காரில் அமர்ந்திருந்தார். அதில் ஒரு ரசிகர் காருக்குள்ளேயே தலையை விட்டு செல்பி எடுக்க முயல, கோபமடைந்த பிரியங்கா ‘காருக்குள்ளேயே வாங்க’.. என கோபம் காட்டினார். அதன்பின் அவரே சுதாரித்து செல்போனை வாங்கி செல்பிக்கு போஸ் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.