அரவிந்த்சாமி ஆர்ஜே.பாலாஜிக்கு கொடுத்த அட்வைஸ்... ஒண்ணு சொன்னாலும் 'நச்'சுன்னு சொல்லிட்டாரே!
பிரபல நடிகரும், இயக்குனரும், ஆங்கருமான ஆர்.ஜே.பாலாஜி, நடிகர் அரவிந்தசாமி உடனான ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
ஒருவாட்டி அரவிந்தசாமி சாரும், நானும் பேசிக்கிட்டு இருந்தோம். நான் போட்டுருக்கற வாட்சைப் பார்த்ததும் 'செமயமா இருக்கு'ன்னு பாராட்டினாங்க. உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. 'அப்பா அவரே சொல்லிட்டாருப்பா... தேவாவே சொல்லிட்டாரு'ன்ற மாதிரி அப்படி ஒரு சந்தோஷமா இருந்தது.
நானும் பயங்கரமா வாட்ச் எல்லாம் கலெக்ட் பண்ணுவேன். ஒரு நாள் அதை நிறுத்திட்டேன்னு சொன்னாரு. ஏன் 'சார் என்ன எதனால நிறுத்திட்டீங்க'ன்னு கேட்டேன்.
'வாட்ச் வந்து நேரத்தைக் காட்டுற ஒரே ஒரு வேலையை மட்டும் செய்றதா நான் ஃபீல் பண்றேன். அதாவது ஒரே ஒரு வேலையை செய்யும் ஒரு கருவி'ன்னாரு. அதை ஆங்கிலத்தில் 'சிங்கிள் யூடிலிட்டி டிவைஸ்'னாரு. எனக்கே அது பயங்கரமான 'ஐ ஓபனரா' இருந்தது.
வெறும் டைம் காட்டுற ஒண்ணுக்கு இவ்ளோ காசைக் கொடுத்து வாட்ச் கலெக்ஷன்லாம் சொல்றாங்க. அவரும் அதைத் தான் பண்ணிக்கிட்டு இருந்துருக்காரு. அதுக்கு அப்புறமா அதுல மோகம் எனக்குக் கொஞ்சம் கம்மியாயிடுச்சு. 'போப்பா வாட்ச் 'அப்படின்னு ஆயிடுச்சு.
அதுக்கு நடுவுல படம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஏதாவது கிப்ட் வாங்கிக்கலாம்னா நான் காருக்கு அப்புறம் ஒரு படத்துக்கு ஒரு வாட்ச் அந்த மாதிரி வாங்கிக்கிட்டு இருந்தேன். ஆனா அதுக்கு அப்புறம் அந்தளவுக்கு அதுல மோகம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காலம் விலைமதிப்பில்லாதது தான். ஆனால் அதைக் காட்டுற ஒரு கருவிக்கு ஏன் இவ்ளோ விலை கொடுத்து நாம வாங்கணும்கறதை சிம்பிளா அழகா சொல்லிக் கொடுத்துள்ளார் அரவிந்தசாமி. அவர் ஒரு பெரிய கோடீஸ்வரர். பிசினஸ் மேன்.
சிறந்த நடிகர். ஆனாலும் கூட சில விஷயங்களில் எளிமையைக் கடைபிடிப்பதால் அனைவரின் மனதிலும் இன்றளவும் உயர்ந்து நிற்கிறார் அரவிந்த சாமி. அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த மெய்யழகன் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.