சிவகார்த்திகேயன் ஆசையில் மண் அள்ளி போட்ட சிம்பு! இப்படி ஒரு ட்விஸ்ட யாரும் எதிர்பார்க்கல

sivakarthikeyan
தக் லைஃப் திரைப்படத்திற்கு பிறகு, சிம்புவின் 49வது படம் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்தப் படம் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருந்தது. ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் ஐடி ரெய்டில் சிக்கியது. இதனால் அவருடைய தயாரிப்பில் இருந்த 'இட்லி கடை' மற்றும் 'பராசக்தி' திரைப்படங்கள் இரண்டும் மேலும் நகராமல் இருந்தன.
இந்நிலையில், அனைத்துப் பிரச்சனைகளையும் கடந்து மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார் ஆகாஷ் பாஸ்கரன். அவர் முதற்கட்டமாக 'இட்லி கடை' படத்தை வெளியிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கிடையில், சிம்பு தனது 49வது படத்தை தற்போது தொடங்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிய வருகிறது.
இப்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் பின், அவருடைய 50வது திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்ற தகவல் வெளியானது. ஆனால், தற்போது அவர் 50வது படத்தை இயக்க மாட்டார் என்றும் அந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதால் இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதன் மாற்றாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்பதுதான் தற்போது உறுதியாகும் போல உள்ளது. அதுவே அவரது 50வது திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது இன்னும் உறுதியாகவில்லை. சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்றால் தான் சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் தெரிகிறது.