இதோட நிறுத்துவது நல்லது.. வதந்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்த சிம்ரன்

90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இப்ப உள்ள ஹீரோயின்களை சார்ந்த ரசிகர்கள் சிம்ரன் ரசிகர்களிடம் எப்போதுமே போட்டி போட முடியாது. அந்த அளவுக்கு எங்கள் நாயகி சிம்ரனை போல் யாருமே வர முடியாது என்றுதான் 90ஸ் கிட்ஸ் கூறுவார்கள் .அந்த அளவுக்கு சிம்ரன் மீது அலாதி அன்பு கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அது இன்னும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஏனெனில் சமீப காலமாக படங்களில் தோன்றி வருகிறார் சிம்ரன். அதே இளமையுடனும் அதே விவேகத்துடனும் அதே அழகுடனும் இன்னும் அப்படியே அவருடைய அழகை பராமரித்து வருகிறார் சிம்ரன். சமீபத்தில் கூட அந்தகன் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்போது தளபதி 69 படத்திலும் சிம்ரன் நடிப்பதாக ஒரு தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இன்னும் அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிம்ரன் அவருடைய சோசியல் பக்கத்தில் பெரிய அளவில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதுவும் மிகுந்த மன வருத்தத்துடன் அந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியது: இதுவரை நான் அமைதியாக இருந்து விட்டேன். இனிமேலும் முடியாது. நான் எந்த பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்படவில்லை. ஆனால் பெரிய ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். அது நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய இலக்கு வேறுபட்டவை. ஒரு பெண்ணாக என்னுடைய எல்லை என்ன என்பதை நான் அறிவேன்.

இதற்கு முன்பும் என்னையும் ஒன்று அல்லது வேறு சில ஒருவருடனும் இணைத்து பேசி இருக்கிறார்கள். அப்போதும் நான் அமைதியாக இருந்தேன். இதில் ஸ்டாப் என்பது ஒரு பவர்ஃபுல்லான வார்த்தை. அதை இப்போது நான் பயன்படுத்துகிறேன். இப்படி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க யாருமே முயற்சிக்கவில்லை. என்னுடைய உணர்வுகளுக்கும் யாரும் மதிப்பளிக்கவில்லை.

என்னுடைய பெயரை பயன்படுத்தி நான் எந்த ஒரு அட்வான்டேஜும் எடுக்கவில்லை. சினிமாவில் வந்த பிறகு எது சரியோ அதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். தொழில்துறையில் விவேகமானவர்களாக இருப்பவர்களிடமும் அதையே தான் நான் எதிர்பார்க்கிறேன். தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம். இப்படி பரப்பியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிகவும் வருத்தத்துடன் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார் சிம்ரன்.

இவர் கூறியதன் பின்னணியில் சமீப காலமாக விஜயை வைத்து ஒரு படம் சிம்ரன் தயாரிக்கப் போவதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இப்போது சிம்ரன் தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறார். அதனால் தன்னுடைய முதல் தயாரிப்பில் விஜயை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் விஜயிடம் சிம்ரனே கேட்டதாகவும் அதற்கு விஜய் மறுப்பு சொன்னதாகவும் தகவல் வெளியானது.

அதை குறிப்பிட்டு தான் சிம்ரன் இப்படி ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார் போல என இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டில் கூறி வருகிறார்கள்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it