சிவகார்த்திகேயன், முருகதாஸ் படத்தோட நிலைமையைப் பாருங்க... இதெல்லாம் தேவையா?

உலகநாயகன் கமல்ஹாசனின் சொந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அமரன் என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கடும் சிரத்தை எடுத்து தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

டிரெய்லரிலேயே அவருடைய உன்னதமான நடிப்பை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்று இருந்தனர். அந்த வகையில் தற்போது தளபதி விஜய் அரசியலுக்குச் சென்றதும் அவரது இடம் சிவகார்த்திகேயனுக்குத் தான் என்ற பேச்சு பரவலாக உலா வருகிறது. தனது ஒவ்வொரு படத்தையும் கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து வருகிறார்.

முதலில் நகைச்சுவை கலந்த காதல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது அதிரடி படங்களில் இறங்கி விட்டார் என்றே சொல்லலாம். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பிடித்தமான நடிகர் என்றைக்கும் தோற்றதாக சரித்திரமில்லை என்ற வகையில் சிவகார்த்திகேயன் தமிழ்த்திரை உலகில் வலம் வருவது அவரது முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன என்றே சொல்ல வேண்டும். ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என சிலரை இந்த வகையில் குறிப்பிடலாம்.


சிவகார்த்திகேயன் அதிரடி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து படம் பண்ணுவதாக தகவல்கள் வந்தன. அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனோட படப்பிடிப்பு இப்போ எந்த நிலைமையில இருக்குன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டு இருக்கும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்பட வில்லை. அப்படி திட்டமிட்டபடி தொடங்கி இருந்தா இந்நேரத்துல அந்தப் படத்தோட படப்பிடிப்பு முடிந்து இருக்கும். அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் படப்பிடிப்பு தேதிகள்ல மிகப்பெரிய மாற்றம் இருக்காதுங்கற நம்பிக்கையில தான் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான்கான் நடிச்ச இந்திப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.

அந்தப்படத்தைப் பொருத்தவரைக்கும் அது பிராப்பர் ஷெடுயுல்ல நடக்கு. அப்படி இங்க நடத்த முடியாததால தான் சிவகார்த்திகேயனோடு படப்பிடிப்பு தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டு இருக்குது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it