நம்பி கதையை அனுப்பினா இப்படி சுடலாமா?!. ரசிகைக்கே விபூதி அடித்த நானி!.. ஹிட் 3 பஞ்சாயத்து!...

by AKHILAN |
நம்பி கதையை அனுப்பினா இப்படி சுடலாமா?!. ரசிகைக்கே விபூதி அடித்த நானி!.. ஹிட் 3 பஞ்சாயத்து!...
X

Nani: தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக இருக்கும் நானியின் மீது தமிழ் எழுத்தாளினி போட்டு இருக்கும் புகார் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு நடிகராக இருப்பவர் நானி. இவர் தன்னுடைய ரொமாண்டிக் நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் காதல் படங்களில் நடித்து வந்த நானி தற்போது ஆக்‌ஷன் ரூட்டையும் பிடித்து இருக்கிறார்.

இதனால் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் இவர் பிடித்த நடிகராக இருக்கிறார். தற்போது நானி தன்னுடைய புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அவி, கோர்ட் படங்களை தயாரித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஹிட் என்ற சீரிஸ் படத்தினை தயாரித்து வருகிறது இவர் நிறுவனம். முதல் இரண்டு பாக படங்கள் இன்னொரு ஹீரோவை வைத்து தயாரிக்க மூன்றாவது பாகத்தில் நானியே நடித்து இருந்தார். படம் ரத்தக்களமாக இருந்ததால் பலரிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஓரளவு நல்ல வசூலை குவித்து இருக்கும் இப்படம் தற்போது பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறது. தமிழ் எழுத்தாளினியான விமலா வேலன் என்பவர் சோனியா விமல் என்ற பெயரில் கதை எழுதுவதை பழக்கமாக கொண்டவர்.

இவர் 2021ல் உருவாக்கப்பட்ட தன்னுடைய ஏஜெண்ட் வி கதையை அப்பட்டமாக காப்பி அடித்துதான் ஹிட் 3 படத்தினை எடுத்திருப்பதாக நானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இவரின் கதையும் ஹிட் 3 கதையும் ஒன்றாக இருப்பதாக தென்னிந்திய சினிமா எழுத்தாளர் சங்கமும் உறுதி செய்து இருக்கிறது.

சோனியா நானிக்கு எழுதிய கதையை அவருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார். அதை தொடர்ந்தே இப்போது இந்த பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் கதை திருட்டு தொடர்பான இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

நானியின் ரசிகையான சோனியாவுக்கும் அவரின் பிடிச்ச நடிகருக்குமான இந்த வழக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நானி மாதிரி பலருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரு நடிகர் இதை செய்யலாமா என்பதையும் கேள்விகளாக எழுப்பி உள்ளனர்.

Next Story