18 வருசத்துக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீகாந்த்… கல்யாண நடந்த கதை தெரியுமா?

by AKHILAN |   ( Updated:2025-06-24 06:30:39  )
18 வருசத்துக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீகாந்த்… கல்யாண நடந்த கதை தெரியுமா?
X

Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது போதை பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் கல்யாண சர்ச்சை குறித்த விஷயமும் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

நுங்கம்பாக்கம் விடுதியில் நடந்த சோதனையில் அதிமுகவை சேர்ந்த பிரசாந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் நடிகர்கள் பெயர்கள் அடிப்பட்டது. அதில் நேற்று ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அவரிடம் நடந்த 10 மணிநேர விசாரணையில் மருத்து பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் முடிவில் ஸ்ரீகாந்த் தற்போது போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இன்னும் சில நடிகர்களின் பெயர்களும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு சர்ச்சை ஸ்ரீகாந்துக்கு புதிது இல்லை. 18 ஆண்டுக்கு முன்னரே அவருடைய கல்யாண விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஸ்ரீகாந்த் நடிகை ஒருவருடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின்னர் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொள்வாராம். அப்படி ஒரு பார்ட்டியில் வந்தனா என்பவரை சந்தித்து இருக்கிறார். இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள காதலில் விழுந்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தன் பெற்றோர்களிடம் இந்த காதலை சொல்ல அவர்களோ வந்தனாவை கல்யாணம் செய்துக்கொள்ள மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். இதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் தெலுங்கு படத்தில் நடித்து வந்தவர். அந்த தயாரிப்பாளர் மனைவியின் உதவியுடன் வந்தனாவை காக்கிநாடாவில் கல்யாணம் செய்து கொள்கிறார்.

இருவரும் திருமணம் செய்துவிட்டு பிரிந்து அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்து இருக்கின்றனர். மூன்று மாதம் வந்தனாவுடன் வாழ்க்கை நடத்திய ஸ்ரீகாந்த் ஒரு கட்டத்தில் பெற்றோர் பார்க்கும் பெண்ணை கட்டிக்கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் வந்தனா அதிரடியாக சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தார்.

ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் நுழைந்து அங்கு போராட்டம் நடத்தினார். ஆனால் ஸ்ரீகாந்தின் பெற்றோர்கள் வீட்டில் இருந்து வெளியேறினர். ஸ்ரீகாந்த் தந்தை கோர்ட்டில் கேஸ் போட்டு வந்தனாவை வெளியேற்ற உத்தரவு விட கோரிக்கை எழுப்பினார்.

தீர நடந்த விசாரணையில் வந்தனா இவரின் மனைவி என்பதால் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என உத்தரவிட்டனர். வந்தனாவும் வீட்டில் இருந்தது அப்போது செய்திகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டுக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் வந்து வந்தனாவிடம் சமாதானம் பேசி இருவரும் வாழ முடிவெடுத்ததாக பின்னர் அறிவித்தனர். பின்னர் இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொள்ள ரகசியமாக நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண சர்ச்சையால் முன்னணியில் இருக்க வேண்டியவருக்கு வாய்ப்புகள் குறைந்து மொத்தமாக ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அடுத்த சர்ச்சையில் மாட்டி இருக்கிறார்.

Next Story