சுசித்ராவுக்கு முதல் ஆப்பு வைத்த பிரபல நடிகை… விரைவில் கைதாகிறாரா?

Suchitra: கோலிவுட்டில் இருக்கும் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான வகையில் கருத்து சொல்லி வரும் பாடகி சுசித்ராவிற்கு முதல் தடையாக நடிகை ஒருவர் செய்திருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பல நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு தெரியாமல் இது நடந்ததாக வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். சில வருடங்கள் அமைதியாக இருந்தவர் சமீப காலமாக கோலிவுட்டின் முக்கிய பிரபலங்களான தனுஷ், ஆண்ட்ரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட நடிகைகள் மீது எக்கச்சக்கமான அவதூறு பேச்சுக்களை பேசி வருகிறார். இந்த விஷயம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

அதிலும் நடிகை ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டி வைப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அவருடைய பார்ட்டியில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு போதை பயன்படுத்தி வந்தனர். அப்போது அங்கு போலீஸ் ரெய்டு நடந்ததும் உண்மை. ஏன் அதை யாரும் கேள்வி கேட்கவில்லை என பேசி இருப்பார்.

இந்த கருத்துருக்கு அப்போதே பதிலளிக்க நடிகை ரீமா கல்லிங்கல், பாடகி சுசித்ரா 2017ல் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது முன்கூட்டியே தெரியும் எனவும் பேசி இருக்கிறார்.

மேலும், என்னுடைய வீட்டில் போதை பார்ட்டி நடந்ததாகவும் அதற்கு நான் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என்னைப் பற்றி அவதூறாக பேசி வரும் சுசித்ரா மீது சிறப்பு புலனாய்வு பிரிவில் புகார் அளித்திருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது சுசித்ரா மீது கொச்சி காவல்நிலையத்தில் ரீமா கல்லிங்கல் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் நடிகை சுசித்ரா விரைவில் கைதாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் யூட்யூப்பர் இர்ஃபானை ஆதாரம் இல்லாமல் பேசிய மற்றொரு யூட்யூபரான பிரியாணி மேன் ரபி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it