என்னுடைய அடுத்த ஹீரோ இவர்தான்…உடனே ஆசையை நடத்திட்டாரே… வெற்றிமாறன் சர்ப்ரைஸ்!..

Vetrimaran: பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய அடுத்த ஹீரோ குறித்த ஆச்சரிய அறிவிப்பை வெளியிட்டு இருப்பது வைரலாகி வருகிறது.

பொல்லாதவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் வெற்றிமாறன். அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தனுஷை வைத்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.

ஒரே திரைப்படத்தில் ஆறு தேசிய விருதுகளையும் வாங்கியது. அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படமும் ரசிகர்களிடம் அப்பிளாசை அள்ளியது. இப்படமும் தேசிய விருது வாங்க கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக மாறினார் வெற்றிமாறன்.

அதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான அசுரன், வடசென்னை திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரின் நடிப்பில் விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் கிளைமாக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து மாடுபிடி வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இருந்தும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் தான் இது உறுதியளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தேவார பிரமோஷனல் நடிகர் ஜூனியர் என்டிஆர் வெற்றி மட்டும் கூறினால் தமிழ் படத்தில் நடிப்பேன். அதை வேண்டுமானால் தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம் என ஓப்பனாக தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இது குறித்து வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பிய போது வாடிவாசல் மற்றும் விடுதலை இரண்டாம் பாகம் முடிந்த பின்னர் இது நடக்கும்.

ஏற்கனவே ஜூனியர் என்டிஆரை பார்த்து ஒரு கதை சொல்லி இருக்கிறேன். விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே தமிழில் பிரபல இயக்குனர்கள் மற்ற மொழிகளில் தங்களுடைய கவனத்தை திருப்பி இருக்கும் நிலையில் வெற்றிமாறனும் இந்த லிஸ்டில் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Articles
Next Story
Share it