‘வடசென்னை 2’ வருது.. வெற்றிமாறனே சொன்ன பிறகு நோ கன்ஃபியூசன்

அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வட சென்னை 2 படம் நிச்சயமாக வருகிறது என வெற்றி மாறன் சமீபத்திய ஒரு விழா மேடையில் கூறியிருக்கிறார். இவ்வளவு நாளாக மரண வெயிட்டிங் என்று சொல்வார்கள் .அப்படித்தான் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படமாக வடசென்னை 2 திரைப்படம் இருக்கிறது. தனுஷ் நடிப்பில் வெளியான அதன் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காகவும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்தப் படம் வருமா வராதா என அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அதற்கு காரணம் இடையே அந்த படத்தை பற்றி வந்த சில தகவல்கள் தான். சமீபத்தில் கூட வடசென்னை 2 படத்தில் தனுஷ் நடிக்க மாட்டார். சிம்புவை வைத்து தான் அந்த படத்தை வெற்றிமாறன் எடுக்கப் போகிறார் என்ற ஒரு செய்தியும் வெளியானது. இதைப்பற்றி தனுஷிடமும் சொல்லி வெற்றிமாறன் அனுமதி பெற்று விட்டார் என்றும் பல தகவல்கள் கிடைத்தன.
ஆனால் சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் கண்டிப்பாக தனுஷை வைத்து தான் எடுப்பார். சிம்புவை வைத்து அவர் தனியாக வேறொரு கேங்ஸ்டர் திரைப்படத்தை தான் எடுக்கப் போகிறார் என கூறி வந்தார். இதற்கிடையில் நேற்று திடீரென ஒரு புகைப்படம் வெளியானது. சிம்பு வெற்றிமாறன் இணையும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான ஷூட்டிங் சம்பந்தப்பட்ட புகைப்படம் என அந்த ஒரு போட்டோ இணையதளத்தில் வைரலானது.
அதில் சிம்புவின் அருகில் இயக்குனர் நெல்சன் நின்று கொண்டிருந்தார் .அதனால் இது வடசென்னை 2 படமா அல்லது வேறொரு கேங்ஸ்டர் திரைப்படமா என அனைவருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. இந்த நிலையில் இன்று வெற்றிமாறன் வடசென்னை 2 படம் கண்டிப்பாக வருகிறது என்ற ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார். திருவள்ளூரில் நடந்த கால்பந்து விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறனிடம் வட சென்னை 2 படத்தை பற்றிய அப்டேட் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என ஒரு ரசிகர் கேட்க அதற்கு வெற்றிமாறன் வடசென்னை 2 படம் நிச்சயமாக வருது என சொல்லி ரசிகர்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார்.