வேட்டையன் படத்தில் அமிதாப்புக்கு குரல் கொடுத்த தமிழ் வில்லன்… யார் தெரியுமா?

Vettaiyan: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையின் திரைப்படத்தில் அமிதாப்பச்சனுக்கு டப்பிங் கொடுத்திருக்கும் பிரபல நடிகர் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்தாண்டு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த வெற்றி தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல ரஜினிக்கும் ஒரு புது எனர்ஜியை கொடுத்ததாகவே கூறப்படுகிறது. இதனால் தற்போது ஒரே வருடத்தில் அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

அதில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது வேட்டையன் திரைப்படம். ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் தான் நடிக்க இருக்கிறார். அதிலும் என்கவுண்டர் சம்பந்தப்பட்ட பரபரப்பு கதையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் திரைப்படத்தை போல இதிலும் மல்டி ஸ்டார் கூட்டம் இருக்கின்றனர். வில்லனாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, ரஜினியின் மகன் வேடத்தில் ஃபகத் பாசில், மனைவியாக மலையாளி லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்கின்றனர். அதிலும் இப்படத்தில் முக்கிய இடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தே இந்த ஷூட்டிங்கில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தற்போது படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் அமிதாப்பச்சனின் கேரக்டர் மற்றும் டப்பிங் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் சத்தியதேவ் என்னும் வேடத்தில் நடிக்க இருப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதில் அமிதாப்பிற்கு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் டப்பிங் பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it