தப்பா எழுதுனாங்க.. உடனே விஜய் பண்ண விஷயம்! வனிதாவுக்காக இப்படிலாமா?

vijay
விஜயும் வனிதா விஜயகுமாரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். விஜயை பற்றி பல விஷயங்களை வனிதா விஜயகுமார் பேட்டிகளில் கூறியிருக்கிறார். இருவரும் சேர்ந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருப்பார். அந்த படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி லவ் எல்லாமே பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.
குறிப்பாக அந்த படத்தில் அமைந்த அல்லாஹ் உன் ஆணைப்படி பாடல் இன்றுவரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக இருக்கிறது. ஆனால் அதன் பிறகு விஜயுடன் சேர்ந்து வனிதா விஜயகுமார் நடிக்கவே இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது .அவருடைய ரூட் வேறு மாதிரியாக சென்றது. அது அவரை ஹீரோயினாக இந்த சினிமா உலகில் நிலைத்திருக்க விடவில்லை .
இந்த நிலையில் விஜய்யை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பேட்டியில் கூறியிருக்கிறார் வனிதா விஜயகுமார். சந்திரலேகா படத்தில் நடிக்கும் போதே ராஜ்கிரணுடன் வனிதா விஜயகுமார் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது வனிதா விஜயகுமாருக்கு 15 வயது தான் இருக்குமாம். ராஜ்கிரணுக்கு 40 வயதுக்கு மேல் இருக்குமாம். ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து அப்போதைய பத்திரிகைகளில் கிசுகிசுக்களாக வெளியாகியிருக்கிறது.
அதைப் பார்த்து வனிதா விஜயகுமார் சந்திரலேகா படப்பிடிப்பில் மிகவும் அப்செட்டில் உட்கார்ந்து இருந்தாராம். அதுவும் அழுது கொண்டே இருந்தாராம். அருகில் விஜய் அதை பார்த்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்டாராம். அதற்கு வனிதாவை விஜயக்குமார் ஒன்றும் இல்லை என சொல்ல இப்போ சொல்ல போறியா இல்லையா என கேட்டிருக்கிறார்.
அதன் பிறகு தான் வனிதா விஜயகுமார் எதற்காக அழுதேன் என்பதை தெரிவித்து இருக்கிறார் .உடனே விஜய் உன்னை பற்றி எழுதவில்லை என்றால் தான் நீ இந்த சினிமாவில் இல்லை என்று அர்த்தம். உன்னைப் பற்றி எழுதுகிறார்கள் என்றால் நீ இன்னும் இந்த சினிமாவில் இருக்கிறாய் என்ற அர்த்தம். எழுத எழுத தான் நீ பாப்புலர் ஆகி கொண்டே இருப்பாய். அதனால் எந்த ஒரு விமர்சனத்திற்காகவும் நீ கவலைப்படாதே.
vaintha
அடுத்தடுத்த வேலைகளை பார்த்துக் கொண்டே இரு என கூறினாராம் விஜய். இதை அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் வனிதா விஜயகுமார். இப்போது வனிதா விஜயகுமார் ஹீரோயின் ஆக மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்ற படத்தில் ராபர்ட்டுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்கியதும் அவர்தான். தயாரித்தது அவருடைய மகள் ஜோவிகா விஜயகுமார்.