Magudam: மிஷ்கினோட சாபம் சும்மா விடுமா!. விஷாலுக்கு வச்சிட்டாங்களே ஆப்பு!...
கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பதோடு நடிகர் சங்கத்தின் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என முக்கிய பதவிகளை பிடித்தவர் விஷால். இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று தமிழ் சினிமா தொடர்பான சங்கங்களில் முக்கிய பதவிகளில் விஷால் இருந்தார். தற்போது நடிகர் சங்க செயலாளராக மட்டுமே இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே விஷாலின் நடிப்பில் வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மட்டும் ஹிட் அடித்தது. அந்த படம் வெற்றிக்கு எஸ்.ஜே சூர்யா முக்கிய காரணமாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.சில மாதங்களுக்கு முன்பு ஈட்டி, ஐங்கரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க மகுடம் என்கிற படம் துவங்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.
ஆனால் சில காரணங்களால் ரவி அரசுக்கு நடந்து கொண்டது விஷாலுக்கு கோபத்தை ஏற்படுத்த ரவி அரசை தூக்கிவிட்டு விஷாலே படத்தை இயக்கத் துவங்கினார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தீபாவளியன்று வெளியிட்டார் விஷால். மேலும் விஷாலை சமாதானப்படுத்துவதற்காக ரவி அரசு தனது மனைவியுடன் விஷாலை சந்திக்க அவரின் வீட்டுக்கு சென்றபோது விஷால் அவரை சந்திக்கவில்லை. இதனால், வீட்டிற்கு வெளியே ரவி அரசு சில மணி நேரம் காத்திருந்ததாக சொல்லப்பட்டது.

ஆனலும், விஷால் மீது புகாரளிக்க ரவி அரசு தயங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், இயக்குனர் சங்கம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் புகார் கொடுக்க பெப்சி அமைப்பு மூலம் மகுடம் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சங்கம் நிறுத்திவிட்டது. விஷால் தயாரித்து நடித்த துப்பறிவாளன் 2 படம் வெளிநாட்டில் நடந்து கொண்டிருந்த போது மிஷ்கினுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அந்த படத்திலிருந்து வெளியேறினார் மிஷ்கின்.
எனவே அந்த படத்தை நானே இயக்குவேன் என விஷால் அறிவித்தார். ஆனால் நஷ்ட ஈடாக தனக்கு விஷால் 4 கோடி கொடுக்காமல் அந்த படத்தை இயக்க முடியாது என செக் வைத்துவிட்டார் மிஷ்கின். எனவே அவரிடம் NOC வாங்காமல் அந்த படத்தை விஷலால் இயக்க முடியாமல் போனது. அதேபோல இப்போதும் ரவி அரசிடம் என்.ஓ.சி வாங்காமல் மகுடம் படத்தால் இயக்க முடியாத நிலை விஷாலுக்கு ஏற்பட்டிருக்கிறது.
