கர்நாடகாவில் தக் லைஃப் வெளியிடுவதில் தொடரும் இழுபறி... கமல் கையில் தான் எல்லாம்..!

by SANKARAN |
kamal
X

கன்னட மொழி தமிழில் இருந்து வந்ததுதான் என கமல் சொன்னதும் சொன்னார்... கர்நாடகாவே கொந்தளித்துப் போய்விட்டது. தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவராஜ் குமாரைப் பார்த்து கன்னடம் தமிழில் இருந்து வந்ததுதான் என சொல்லிவிட்டார் கமல்.

அதனால் கமல் எப்படி அப்படி சொல்லலாம். கன்னடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு என கர்நாடக முதல்வர் சித்தராமையாவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கமல் பேசிய பேச்சு அங்கு சூடுபிடித்து கமல் படங்களைத் தீயிட்டும், உருவபொம்மைகள் எரித்தும், பேனரைக் கிழித்தும் என பல அசம்பாவிதங்கள் அரங்கேறி விட்டன.

கமலோ அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் வளரவே செய்கிறது. கமல் இப்போது துபாயில் பட புரொமோஷனுக்காக சென்றுள்ளார். படம் வரும் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் படம் திரையிடுவதில் சிக்கல் தொடர்கிறது. இதன் தொடர்ச்சி என்ன? இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.


ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு கர்நாடக திரைப்பட சம்மேளனமோ அல்லது வேறு யாரோ இடையறு விளைவிக்கக்கூடாது. அதே நேரம் போலீஸ் பாதுகாப்பும் வேண்டும் என்று மனுதாக்கல் செய்து இருந்தார்கள். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் தெரிவித்த விவரம் இதுதான்.

நீதிமன்றம் உத்தரவிட்டால் என்ன? திரையரங்குகளில் திரையிட உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளா விட்டால் சட்டரீதியாக ஒன்றும் செய்ய முடியாது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு தெரிவித்துள்ளார்.

மொழி விவகாரத்தில் எந்த சமாதானமும் வேண்டாம் என கர்நாடக அரசும் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. தேவைப்பட்டால் சட்டரீதியான உதவிகளை செய்வதாக அரசு உறுதியளித்துள்ளது. கர்நாடகாவில் 8 கோடி ரூபாய்க்கு விநியோக உரிமை பெற்றுள்ளவர் வெங்கடேஷ் தயாரிப்பு நிறுவனத்துடன் தொடர்ந்து பேசி வருகிறார். கமல் துபாயில் இருப்பதால் அவர் வந்த உடன் பதில் தெரிவிப்பதாக தகவல் வந்துள்ளது.

Next Story