பவன்கல்யாணுக்கு திடீரென நன்றி சொன்ன யோகிபாபு.. கொண்டாடும் ஆந்திர ரசிகர்கள்… சேதி என்ன?

Yogibabu: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பல மொழிகளில் பிஸியாக நடித்த வரும் யோகி பாபு திடீரென ஆந்திர துறை முதல்வர் பவன் கல்யாணிடம் நன்றி தெரிவித்திருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீப நாட்களாகவே ஆந்திராவின் லட்டு விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து துணை முதல்வரான பவன் கல்யாண் விரதமிருந்து பரிகாரம் செய்து வருகிறார்..

இந்நிலையில் பேட்டி ஒன்று நடிகர் கார்த்தியிடம் லட்டு குறித்து கேட்டபோது தற்போது அதை பேசக்கூடாது என அவர் சொல்லியதற்கு பவன் கல்யாண் கடுமையான கண்டனம் தெரிவித்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் கார்த்தி பொதுவெளியில் மன்னிப்பை உரைத்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் கார்த்திகை தெலுங்கு ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். அதுபோல துணை முதல்வர் பவன் கல்யாணை தமிழக ரசிகர்களும் விமர்சித்து வந்தனர். இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, நடிகர் யோகி பாபு திடீரென தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், என்னுடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமான மண்டேலா படம் குறித்து முக்கியமான நேரலையில் பேசிய ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் தெலுங்கு சினிமாவின் ஆளுமையுமான பவன்கல்யாண் சாருக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

பவன் கல்யாண் பேட்டி ஒன்றில் தமிழ் பிரபலங்கள் நடிப்பை குறித்து பாராட்டி பேசி இருந்தார். அதில் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் அவருடைய நடிப்பை மிக அழகாக பிரதிபலித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது குறித்த வீடியோவுடன் தற்போது யோகி பாபு நன்றி தெரிவித்திருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Related Articles
Next Story
Share it