ஜெய்பீம் திரைப்படம் மனதை கனமாக்கி விட்டது..பாராட்டிய முதல்வர்....

பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இப்படத்தில் இருளர் சமூகத்தினரை காவல்துறை எப்படி நடத்துகிறது என சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நியாயம் வாங்கித்தரும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

jaibhim

இப்படம் செய்தியாளர்களுக்கும், சினிமா விமர்சகர்களுக்கும், ஊடகவியலார்க்கும் நேற்று திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டியிருந்தனர். திரைப்படம் எடுத்ததோடு மட்டுமில்லாமல் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை தமிழக முதல்வரிடம் சூர்யா அளித்துள்ளார்.

j

தற்போது இப்படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை மிகவும் பாராட்டியுள்ளார். ‘பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு! வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்’ எனக்குறிப்பிட்டு ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

twit

அவருக்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா ‘வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…’ என பதிவிட்டுள்ளார்.

twit

 

Related Articles

Next Story