அதிரடியாக தொடங்கும் குக் வித் கோமாளி சீசன் 6… ஆங்கர் அப்டேட்டால் மோசம் போன ரசிகர்கள்!

cwc
CWC: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் குறித்த அப்டேட் கசிந்து இருக்கிறது.
விஜய் டிவி எப்போதுமே புதுமையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும். அந்த வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. ஒரு சமையல் நிகழ்ச்சியில் காமெடியை புகுத்தி இருந்த விதம் ரசிகர்களிடம் ஹிட்டடித்தது.
பொதுவாக ஒரு சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் இங்கு ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கோமாளி கொடுக்கப்படும். அவர்களை சமைக்க வைப்பதே டாஸ்க். இதில் சமையலையும் சரியாக செய்து வெற்றி பெற வேண்டும்.
இப்படி தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ஹிட்டு அடித்த நிலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் இரண்டாவது சீசன் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு என இருவருமே ரசிகர்களிடம் புகழ்பெற்றனர்.
தொடர்ச்சியாக நான்கு சீசன்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. இதில் கடந்த வருடம் ஐந்தாவது சீசன் தொடங்க இருந்த நிலையில் வெங்கடேஷ் பட் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து செப் தாமு அறிவித்து பின்னர் பின் வாங்கினார். இதுவே நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை குவித்தது.

rakshan jacqueline
அதைத்தொடர்ந்து போட்டியாளர்களாக வந்த பிரபலங்களும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கிட்டத்தட்ட அதுவரை சம்பாதித்து வைத்திருந்த எல்லா புகழையும் கடந்த சீசனில் மொத்தமாக கைவிட்டது குக் வித் கோமாளி. ரசிகர்களிடம் பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை குவிந்தது.
நிகழ்ச்சி இறுதிப்போட்டியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை விலகி அதற்கு போட்டியாளராக இருந்த விஜே பிரியங்கா தான் காரணம் என அப்பட்டமாக விஷயத்தை உடைத்தார். அதுவரை பலரின் மன அழுத்தத்தை போக்க காரணமாக இருந்த ஒரு நிகழ்ச்சி பலரின் மன அழுத்தத்துக்கு காரணமானார்.
இதனால் மணிமேகலை தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி இருக்கிறார். இந்த ஆண்டின் குக் வித் கோமாளி அடுத்த சீசன் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாக முன்னாள் போட்டியாளரான ஷகீலா தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் நிகழ்ச்சி மே மாதத்தில் ஒளிபரப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தற்போதும் மணிமேகலை இடத்தில் விஜே பிரியங்கா வர வாய்ப்பு இருப்பதாகவும் அல்லது ரக்ஷனின் பழைய ஜோடியான ஜாக்குலின் வரவும் வாய்ப்பிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் ஜாக்குலின் தற்போது புகழில் இருக்கிறார். இதனால் தற்போது விஜய் டிவி இரண்டாவது எண்ட்ரியை பயன்படுத்துவார் என்றே நம்பப்படுகிறது. இருந்தும் காமெடிக்கு மணிமேகலையை யாராலும் குக் வித் கோமாளியில் மிஞ்ச முடியாததால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு கடுப்பாகவே இருக்கும்.