முடிந்த பைனல்… குக் வித் கோமாளி வின்னர் இவங்கதானாம்… கடுப்பில் ரசிகர்கள்

Cookwithcomali: குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் பைனல் முடிந்து வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் தொடங்கியதில் இருந்தே பிரச்னைக்கு பஞ்சமில்லாமல் தான் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் தயாரிப்பு குழு விலகியது. அதையடுத்து முக்கிய நடுவரான வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: எக்ஸில் மணிமேகலைக்கு குவியும் சப்போர்ட்… அசிங்கப்படும் விஜே பிரியங்கா…

செஃப் தாமு தானும் செல்ல இருப்பதாக அறிவித்த சில மணிநேரத்தில் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடங்கியது இந்த நிகழ்ச்சி. ஆனால் முதல் சில வாரங்களிலேயே நிகழ்ச்சி போர் அடிக்க தொடங்கியது. தேவையே இல்லாமல் அக்காடா தம்பிடா டயலாக்குகள், காதல் டிராக் என சின்ன பிக்பாஸாகவே நிகழ்ச்சியை மாற்றினர். ஒருகட்டத்தில் ரசிகர்கள் முகம் சுழிக்கும் வார்த்தைகள் எல்லாம் பேச தொடங்கினர்.

இப்படி இருந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க தற்போது ஆங்கராக இருந்த மணிமேகலை பாதியிலேயே வெளியேறினார். தவிர்க்க முடியாத காரணம் என நிகழ்ச்சியில் கூறப்பட்டது. ஆனால் நேற்று இரவே என்னுடைய சுயமரியாதை தான் முக்கியம். குக்காக வந்துள்ள ஆங்கர் என் வேலையில் நிறைய தலையீடு செய்கிறார்.

இதையும் படிங்க: தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…

சொல்ல பாத்துவிட்டேன். அதனால் விலகுகிறேன் எனக் கூறி இருந்தார். அவர் சொன்ன விஷயங்களை வைத்து பார்த்த போதே அது விஜே பிரியங்காவை சொல்வது தான் என அப்பட்டமாக தெரிந்தது. இருந்தும் இதை கண்டுக்கொள்ளாத பிரியங்கா தேஷ்பாண்டே விடுமுறைக்கு பறந்தார்.

இந்நிலையில் குக் வித் கோமாளியில் பைனல் நடந்து முடிந்துவிட்டதாம். அதில் பிரச்னைக்கு காரண கர்த்தாவான விஜேபிரியங்கா கப்பை தட்டி சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் எப்படி இருந்த நிகழ்ச்சியை இப்படி அடக்குமுறை மற்றும் நெகட்டிவிட்டி என அசிங்கப்படுத்திட்டீங்களே என வெதும்பிக்கொண்டு இருக்கின்றனர்.

Related Articles
Next Story
Share it