---Advertisement---

பிரசாந்த் படத்தில் பிரியங்கா ராஜகுமாரன்.. முதல் படத்தில் தேவயானி மகளுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Published on: April 9, 2026
---Advertisement---

மூத்த நடிகர் தியாகராஜன் இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் நடித்து வரும் ரஞ்ஜன் திரைப்படத்தின் மூலம், நடிகை தேவயானியின் இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். பிரசாந்தின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

“காதல் கோட்டை” திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகை தேவயானி, அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதன் பின்னர் “நீ வருவாய் என” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அந்த படத்தின் இயக்குநரான ராஜகுமாரனுடன் காதல் மலர்ந்து, பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தேவயானி மற்றும் ராஜகுமாரன் தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் இனியா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது பாடும் திறமையின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். தற்போது, தனது இளைய மகள் பிரியங்காவையும் நடிகையாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, நடிகர் நானி தயாரிப்பில் ராம் ஜகதீஷ் இயக்கிய “கோர்ட்” என்ற தெலுங்கு திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தை தற்போது நடிகர் தியாகராஜன், தனது மகன் பிரசாந்தை வைத்து தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த “கோர்ட்” படத்தில் நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் தற்போது பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ரஞ்ஜன் திரைப்படத்தில், இயக்குநர் தியாகராஜன் தேவயானியின் மகள் பிரியங்காவிற்கு சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பை வழங்கிய நிலையில், அவருக்கு சம்பளம் ஆக ஏதும் தரவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி கதிரேசனுக்கும் சம்பளம் இல்லை என தகவல்கள் கசிந்துள்ளன. குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் வெற்றிப் பெற்ற பின்னர், லாபத்தில் நிச்சயம் பங்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.