More
Categories: Cinema News latest news

திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!

Dhanush: நடிகர் தனுஷ் தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். ஆனால் சில வருடங்களாகவே அவரின் திரைப்படங்களில் பெரிய அளவில் ரீச் கொடுத்து வருகிறது. வாத்தி, திருச்சிற்றம்பலம் வசூல் ரீதியாகவும் வெற்றி படங்களாகவே அமைந்தது.

இதனால் தனுஷின் அடுத்த படமான கேப்டன் மில்லர் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் தனுஷ் அடுத்து படத்தினை இயக்க போறாராம். அட என்னங்க படம் ஹிட்டடிக்கும் நேரத்தில் இந்த விஷ பரீட்சையெல்லாம் தேவையா என பலர் கேள்வி எழுப்பிய நிலையில் அதுக்கு பின்னாடி செம காரணம் ஒன்று இருக்கிறதாம்.

இதையும் படிங்க: கலைஞர் விழாவில் கருணாநிதியாக நடிக்க இருப்பது இந்த நடிகரின் மகனா? அச்சு அசல் அப்படியே இருக்கே

கேப்டன் மில்லர் படம் முடிந்ததும் ஹெச்.வினோத் இயக்கத்தில் லலித் தயாரிக்க இருந்த படத்தில் தனுஷ் நடிக்க இருந்தார். ஆனால் வினோத்துக்கு கமலிடம் இருந்து வாய்ப்பு வந்ததும் அவர் அந்த படத்தில் பிஸியாகிவிட்டார். இதனால் தனுஷ் உடனான படம் தள்ளிபோனது.

இதை தொடர்ந்து தெலுங்கில் சேகர் கமுலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ஆனால் ராஷ்மிகா மந்தனா டேட் குழறுபடியால் அவரும் படத்தினை தள்ளி வைக்கிறார். இதனால் நடிகர் தனுஷுக்கு வேலையில்லாமல் போய்கிறது. இதை விரும்பாமல் டைரக்டர் தனுஷுக்கு வேலை கொடுக்க தொடங்கிவிட்டார்.

அதன் பேரினேலே நிலவுக்கு என்னடி கோபம் படத்தினை இயக்க இருக்கிறார். அவரின் அக்கா மகன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் கதையை எழுதியவர் செளந்தர்யா ரஜினிகாந்த். அப்போது அந்த படத்தில் நடிக்க இருந்தது காளிதாஸ் ஜெயராம். ஆனால் செளந்தர்யாவை வைத்து தயாரிப்பாளர் தாணு ஒரு படம் எடுக்க விரும்பவில்லையாம்.

இதையும் படிங்க: நீ பண்ணதே போதும்!.. கேப்டன் மில்லர் இயக்குனரிடம் கடுப்படித்த தயாரிப்பு நிறுவனம்!..

Published by
Akhilan

Recent Posts