
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய மௌன ராகம், நாயகன் இருவர், தளபதி, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் இந்திய அளவில் ரசிகர்களிடம் பேசப்பட்டன.
மணிரத்தினம் ஒரு படத்தை இயக்கினால் உள்ளூர் முதல் வெளியூர் வரை அப்படம் பல விருதுகளை குவிக்கும்.. எனவெ, அவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்களும், நடிகைகளும் ஆசைப்படுவார்கள்..
மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பதை அவர்கள் ஒரு கௌரவமாக கருதுகிறார்கள். ஆனால் அப்படி தேடி வந்து வாய்ப்பை தனுஷ் மறுத்திருக்கிறார் என செய்திகள் வெளியே கசிந்திருக்கிறது. தக் லைப் படத்திற்கு பின் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டிருக்கிறார்.
அந்த கதையை தனுஷுடம் அவர் சொன்னதாக தெரிகிறது.. கதை பிடித்திருந்தாலும் தனுஷ் கேட்கிற சம்பளத்தை கொடுக்க முடியாது என மணிரத்னம் தரப்பு மறுத்து விட்டதாம். அதன்பின் சிம்புவுடன் பேசி அதுவும் முடியாமல் போய் தற்போது விஜய் சேதுபதியிடம் பேசி ஓகே செய்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி தற்போது பாக்கெட் நாவல் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு பின் அவர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை லைக்கான நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது..