Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக மாறி வருகிறார் நடிகர் தனுஷ். அடுத்து வரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு உதாரணமாக விளங்கும் தனுஷ் சமீபகாலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அசுரன் படத்திற்கு பிறகே தனுஷ் மீது இருக்கும் மரியாதை சினிமா வட்டாரத்தில் அதிகரித்தது என்றே சொல்லலாம். அந்தப் படத்தில் வயதான கெட்டப்பில் நரைமுடியுடன் நடித்திருந்த தனுஷின் நடிப்பை பார்த்து சினிமாவே மிரண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: 12 நாட்கள் ஒரே பேண்ட் ஷர்ட்!.. அழுக்கு பையனாக இருந்த எஸ்.ஜே.சூர்யா!.. எல்லாம் அதுக்காகத்தான்!…
உண்மையிலேயே அசுரத்தனமான நடிப்பு என்பதுபோலத்தான் இருந்தது. அப்படியே கட் பண்ணி பார்த்தால் கர்ணன் திரைப்படம். இது மேலும் ஒரு சரவெடியாக தனுஷுக்கு இருந்தது. கதைகளை தேர்ந்தெடுப்பதை விட அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள் கைதேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அருண்மாதேஸ்வரன் என சினிமாவின் போக்கையே மாற்றிய இயக்குனர்கள் இவர்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த தனுஷ் இப்போது அவருடைய 50 வது படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார்.
இதையும் படிங்க: மனுஷன் யாருக்குத்தான் என்ன பண்ணல? இளையராஜா செய்த செயலால் கதறி அழுத பாடகர் மனோ!
அதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் இளையராஜாவின் பயோபிக். இதில் தனுஷ்தான் நடிக்கிறார்.
இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன்தான் இயக்குகிறார். படத்தை மும்பையை சேர்ந்த ஒரு பட நிறுவனம்தான் தயாரிக்கிறதாம். இது இளையராஜாவின் பயோபிக் என்பதால் ராயல்ட்டி படி இளையராஜாவுக்கு சில கோடிகளை தரவேண்டும்.
இதையும் படிங்க: 8 நாள் கால்ஷீட் கொடுத்தேன்… ஆனா 100 நாளை தாண்டி போயிட்டே இருக்கு… வெற்றிமாறனால் புலம்பும் முன்னணி நடிகர்…
ஆனால் அதற்கு பதிலாக படத்தின் ஒரு ஷேரை இளையராஜா கேட்டிருக்கிறாராம். எல்லாவற்றையும் மேலாக படத்தில் நடிக்கும் தனுஷின் சம்பளம்தான் வாயை பிளக்கும் அளவுக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்காக தனுஷுக்கு 50 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாம்.
நடிகை ஐஸ்வர்யா…
நடிகர் அஜித்…
தமிழ் சினிமாவில்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,…
சமீபகாலமாக சினிமாவில்…