More
Categories: Cinema History Cinema News latest news

கிசுகிசுக்கு பயந்து சிலுக்கிடம் பம்மிய ரஜினி?!. சாகும் முன்பு கடைசி நொடியில் இந்த நடிகையை அழைத்த காரணம்?..

சில்க் ஸ்மிதா அவர்களின் வாழ்க்கை பயணம் :

தமிழ் சினிமாவில் அப்போதிலிருந்து இப்போது வரை கவர்ச்சிக்காகவே சில படங்கள் வெற்றி படங்களாக அமைவதுண்டு அந்த வகையில் 80sகளில் பிரபல கவர்ச்சி கன்னி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவரது கவர்ச்சியை பார்க்கவே நிறைய இளம் படையினர் திரண்டு படத்தை வெற்றி படமாக ஆக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சில்க் ஸ்மிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு நடிகை அவர் சுமார் 450 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க மேலும் இவர் நான்கு ஆண்டுகளிலேயே சுமார் 200 பழங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது இதுவரையில் யாரும் இப்படி ஒரு சாதனையை செய்தது கிடையாது அப்படிப்பட்ட சில்க் ஸ்மித் அவர்கள் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

Advertising
Advertising

சில்க் ஸ்மிதா

இந்த நிகழ்வு தமிழ் சினிமாவில் சினிமா நடிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகும் இவரது இறப்பிற்கு காதல் தோல்வி மற்றும் கடன் பிரச்சனை போன்ற நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும் இதுதான் முக்கியமான காரணம் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

இதையும் படிங்க- நயன்தாரா, ஹன்சிகாலாம் இதனால் தான் விட்டுட்டுப் போயிட்டாங்களா.. சிம்பு என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

திரைப்படத்தில் சில்க் அவர்களின் பங்கு:

ஆரம்ப காலத்தில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்த சில்க் அவர்களுக்கு நிறைய படங்கள் தோல்வியை கொடுத்ததன் மூலம் அடுத்தடுத்து சினிமாவில் தனது முத்திரையை பதிக்க அவர் கையில் எடுத்த ஆயுதம் கவர்ச்சி. பிறகு நிறைய சினிமாக்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் குத்தாட்ட பாடலிலும் கவர்ச்சியாக நடிக்கும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வந்தார். தனக்கான ஒரு ரசிகர் பட்டாளங்களை திரட்டினார் சில்க் ஸ்மிதா. இந்த வகையில் இவர் நடித்தாலே அந்த படம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விடும் என்பதற்காக நிறைய காட்சிகளில் இவரை கவர்ச்சியில் விளையாட விட்டு உள்ளனர் அன்றைய கால இயக்குனர்கள் இவருக்காக ஓடிய நிறைய திரைப்படங்கள் உண்டு.

சில்க் ஸ்மிதா

அந்த வகையில் மூன்றாம் பிறை மாபெரும் வெற்றி படமாக அன்றைய காலகட்டத்தில் மக்களின் பேராதரவை பெற்ற அந்த திரைப்படம் கமலஹாசனின் நடிப்பிற்கு கிடைத்த பரிசு என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் உண்மையான காரணம் என்னவென்று பார்த்தால் நடிகை சில்க் ஸ்மிதா அந்த படத்தில் ஒரு பாடலில் வரும் காட்சியைப் பார்க்க மக்கள் அலைகடலென திரண்டு இருந்தார்கள். இதன் காரணமாகவே அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். என்னதான் கமலஹாசன் உயிரைக் கொடுத்து நடிச்சாலும் சில்க் ஸ்மிதா அவர்கள் தங்களுடைய கவர்ச்சியை காட்டி பல இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.

சில்க் ஸ்மிதா அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள்:

இந்த நிலையில் சில்க் ஸ்மிதா அவர்கள் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் அவருக்கு பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடமிருந்து பாலியல் தொல்லைகள் வர ஆரம்பித்தன. நிறைய உச்சம் பெற்ற நடிகர்களே தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று அவருக்கு தொல்லை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு பேரும் சில்க் ஸ்மிதா அவர்களிடம் நெருங்கி பழகவே இல்லை.

திரைப்படத்தில் நடிப்பதை தவிர அவருடன் பேசுவது கூட கிடையாது. காரணம் சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக இருப்பதன் மூலம் தனக்கும் அவருக்கும் எளிதில் கிசுகிசு செய்திகள் வெளியாகும் என்பதில் கவனத்துடன் இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

சில்க் ஸ்மிதா

மேலும் சில்க் ஸ்மிதா அவர்கள் மது போன்ற போதை பழக்கங்களுக்கும் அடிமையாக இருந்தார். இதற்கு காரணம் திரைத்துறையில் அவருக்கு ஏற்படும் மன உளைச்சலும் நிறைய பாலியல் தொல்லைகளும் காரணமாகும் அவற்றையெல்லாம் மறக்கவே போதை பழக்கங்களுக்கு அடிமையானார்.

மேலும் அவருக்கு தாய் தந்தை இரண்டு பேருமே இறந்த நிலையில் அவரது உறவினர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னமான ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். காரணம் இவர் கவர்ச்சியாக நடித்து நிறைய பணம் சம்பாதிக்க அவர்கள் தான் இவரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது பின்வரும் நாட்களில் தெரிய வந்தது.

சில்க் ஸ்மிதாவின் மரணத்தின் கடைசி நொடிகள்:

இந்த நிலையில் சில்க் ஸ்மிதா அவர்கள் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு காரணம் தெளிவாக தெரியவில்லை அவருடைய காதல் தோல்வியா அல்லது குடும்ப பிரச்சனையா மற்றும் திரை துறையில் பாலியல் தொல்லையா என்பது பற்றி இன்றுவரை அவரது மர்மம் ஆகவே இருக்கிறது. ஆனால் இறப்பதற்கு முன்னதாக அனுராதா எனும் மற்றொரு கவர்ச்சி நடிகையை அவர் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.

சில்க் ஸ்மிதா

ஆனால் அவரால் அந்த நேரத்தில் வேறொரு வேலையில் பிஸியாக இருந்ததன் மூலம் நான் பின்னர் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அன்று இரவு அதான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அனுராதா அவர்கள் அவர் கூப்பிட்ட போது சென்றிருந்தால் இந்நேரம் சில்க் அவர்கள் உயிரோடு இருந்திருப்பாரோ என்னவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இதையும் படிங்க- நயன்தாரா, ஹன்சிகாலாம் இதனால் தான் விட்டுட்டுப் போயிட்டாங்களா.. சிம்பு என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

Published by
prakash kumar

Recent Posts