அப்படியா எழுதினார் வைரமுத்து? நாள் முழுவதும் காத்துக் கிடந்த பாரதிராஜா

பாரதிராஜா இயக்கத்தில் வந்த வித்தியாசமான படம் வேதம்புதிது. இன்றைய அரசியல் சூழலில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது.

இதையும் படிங்க… ரஜினி கமலை வைத்து ஒரு படம் கூட எடுக்கலயே! காரணம் என்ன தெரியுமா? டி. ஆரே சொல்லியிருக்காரு பாருங்க

‘மாட்டுவண்டி சாலையில…’என்ற ஒரு பாடல் இந்தப் படத்தில் வருகிறது. மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கான சூழல் இதுதான். சத்யராஜின் மகன் ராஜா. இவர் இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்.

அதே போல சாருஹாசனின் மகள் அமலா பிராமண வகுப்பைச் சார்ந்தவர். இருவரும் காதலிக்கின்றனர். இந்நிலையில் அமலாவை வேறு ஒருவருக்கு மணமுடிப்பதற்காக கூட்டுவண்டியில் இன்னொரு ஊருக்கு அழைத்துச் செல்கிறார் சாருஹாசன்.

அந்த வேதனையைத் தாங்க முடியாமல் ராஜா தவிக்கிறார். இதுதான் அந்தப் பாடலின் சூழல். இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. முதன்முறையாக பாரதிராஜா இளையராஜாவைத் தவிர்த்து விட்டு தேவேந்திரனை இசை அமைப்பாளராக்கி இருப்பார். இவர் இசை அமைத்த அனைத்துப் பாடல்களும் படத்தில் சூப்பர்ஹிட்.

இந்தப் பாடலில் செனாய், வயலின் கருவிகள் சோகத்தைத் ததும்பச் செய்யும். ‘மாட்டு வண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா…’ என்ற பாடலில் ஏன் மாட்டு வண்டி, கூட்டு வண்டி என கேட்கலாம். மாட்டு வண்டி என்றால் பாரம் ஏற்றுவது. கூட்டு வண்டி என்றால் மனிதர்களை ஏற்றுவது.

காட்டு மரங்கள் எல்லாம் கைநீட்டி அழைக்குது என்று இந்தப் பாடலில் கவிஞர் தன் கற்பனையைச் சொருகி இருப்பார். அது போல மாட்டுச் சலங்கை எல்லாம் மகளோடு அழுகுதுன்னு தன்னோட கவிநயத்தை எடுத்துக் காட்டியுள்ளார் வைரமுத்து. இந்தப் பாட்டை முடிக்கும் ஒரு இடத்திற்காகத் தான் பாரதிராஜா வைரமுத்துவுக்காக ஒருநாள் காத்து இருந்தாராம்.

Vetham Puthithu

‘பச்சைக்கிளி இரண்டும் பண்ணி வைத்த பாவமென்ன’ என்று ஒரு வரியைப் போட்டு இருப்பார். மக்கள் இதில் வரும் ‘பண்ணி’யை ‘பன்றி’ என நினைத்து விடக்கூடாது என பாரதிராஜா வைரமுத்துவை தேடி அலைந்தாராம்.

‘பன்றி’ யைக் கிராமப்புறங்களில் ‘பன்னி’ என்று சொல்வார்கள். அது ஒரு வழக்குச் சொல். அப்போது செல்போன் எல்லாம் கிடையாது என்பதால் வைரமுத்துவை அழைக்க காலதாமதம் ஆகியது. அதற்கு கிட்டத்தட்ட ஒரு கால்ஷீட் அதாவது 7 மணி நேரமாகி விட்டது. அதன்பிறகு தான் கவிஞர் வருகிறார்.

‘பச்சைக் கிளியிரண்டும் பண்ணி வைத்த பாவமென்ன..’ என்ற வரியை எடுத்து விட்டு ‘சின்னக்கிளி இரண்டும் செய்து விட்ட பாவமென்ன..’ என்ற வரியாக மாற்றுகிறார். கடைசியாக அன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன என்ற ஒரு வரியைப் போடுகிறார். இது தான் இந்தப் படத்தின் மையக்கருத்து. இப்படி பாரதிராஜா ஒரு வரியை மாற்ற கவிஞருக்காக ஒருநாள் காத்து இருந்துள்ளார்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago