அட்லியியை அலேக்கா தூக்கிய சன் பிக்சர்ஸ்!.. போட்டி போடும் இரண்டு ஹீரோக்கள்!...

Directror atlee: தமிழ் சினிமா மட்டும் என்றில்லாமல் இந்திய சினிமா அளவில் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் பெரிய இயக்குனராக மாறியிருப்பவர் அட்லீ. பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதால் இவரும் அதே பாணியைத்தான் கடை பிடித்து வருகிறார்.

ராஜா ராணி படத்தில் இயக்குனராகிய அட்லி அதன்பின் தெறி, மெர்சல், பிகில் என 3 விஜய் படங்களை இயக்கி விஜயின் குட்புக்கில் இருப்பவர். பிகில் படத்திற்கு பின் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கான் தனது ரெட் சில்லி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ரச்சிதாவுக்கு இருக்கும் நூதன நோய்..! இதனால் தான் தினேஷுடன் விவகாரத்தா?

இந்த திரைப்படத்திற்கு உலகமெங்கும் ஷாருக்கான் ரசிகர்களிடமிருந்து மாபெரும் வரவேற்பு கிடைக்க ஜவான் படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. இதையடுத்து, பாலிவுட் நடிகர்களான அமீர்கான், சல்மான் கான் மற்றும் டோலிவுட்டின் பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் ஆகியோரின் பார்வையும் அட்லி பக்கம் திரும்பியுள்ளது.

atlee-shahrukh khan

இப்போது தனது புதிய படத்திற்கான கதையை அட்லீ எழுதி வருகிறார். இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை தயாரிப்பது சன் பிக்சர்ஸ் என்பது உறுதியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் - அட்லி இடையே ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதையும் படிங்க: சிவாஜியை பார்க்க ரயிலில் அலைமோதிய கூட்டம்… அருமையான பாடல் காட்சி படமானதன் சுவாரஸ்ய பின்னணி…!

அதையடுத்து ஜவான் படத்தையே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், இறுதிக்கட்டத்தில் அது நடக்கவில்லை. எனவேதான், ஷாருக்கானே தயாரித்தார். இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கான் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருபக்கம், புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூனும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில், அட்லியின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிகிறது. எனவே, இறுதியில் யார் இதில் நடிக்க போகிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

 

Related Articles

Next Story