More
Read more!
Categories: Cinema News latest news

பொதுமேடையில் ஒரு நடிகரை இப்படியா திட்டுவது…? பாலாவின் பேச்சால் அதிர்ச்சியடைந்த நடிகர்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வரபவர்களில் இயக்குனர் பாலாவும் ஒருவர். இவரின் படங்கள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும். நடிகர் விக்ரமை திரும்பவும் நம்மிடம் நல்ல முறையில் சேர்த்த பெருமை இவரின் சேது படத்தின் மூலம் தான். படங்களே இல்லாத சமயத்தில் பாலாதான் விக்ரமிற்கு இந்த வாய்ப்பை கொடுத்து மெருகேற்றினார்.

Advertising
Advertising

அதன் பின் பிதாமகன் படத்திலும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினார். சூர்யாவிற்காக நந்தா, ஆர்யாவிற்காக நான் கடவுள் போன்ற படைப்புகளை கொடுத்து அவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

இவருக்கு பிடித்த இயக்குனர்களின் ஒருவர் சமுத்திரகனி. இவரை பற்றி ஒரு பொதுமேடையில் அந்த அளவுக்கு பெருமிதமாக பேசி பாராட்டினார். அதே மேடையில் நடிகர் கஞ்சா கருப்பை திட்டாத வார்த்தைகளால் திட்டினார்.

மேலும் உங்களுக்காக : கவர்ச்சி நடிகைக்கும் கில்மா நடிகைக்கும் இன்று பிறந்தநாள் – ஆனால், நம்ம எல்லோருக்கும் பிடித்தவர் யார் தெரியுமா?

கஞ்சா கருப்பை பார்த்து நீ ஒரு அடி முட்டாள், உனக்கு இது தேவையா? படம் இல்லைனு தான இட்லி கடைக்கு போன மறுபடியும் வந்துட்டியானு கிண்டலா மேடையில் கேட்டார் அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்துடனும் சிரிப்புடனும் பார்த்தனர்.

Published by
Rohini

Recent Posts