Connect with us

Cinema History

பாலாவை திட்டிய நடிகை… படம் பார்த்துவிட்டு காலில் விழுந்து கதறிய அதிர்ச்சி சம்பவம்!

Bala: தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் தான் பாலா. அவரின் கதை மட்டுமல்ல படப்பிடிப்பும் வித்தியாசமாக தான் இருக்கும். நடிகர்களுக்கு என்ன கதையில் நடிக்கிறோம் என்று கூட தெரியாது. ஆனால் நடிக்கணும். பிடிச்சா நடி இல்ல போ இதான் பாலாவின் ரூல்.

அதுவும் ஆரம்ப காலங்களில் ரொம்பவே மோசம். கதையே சொல்லாமல் இப்படி திரும்பு அப்படி பேசு என்று மட்டும் தான் சொல்வாராம். சில நேரங்களில் பல கெட்ட வார்த்தைகளும் மிஸ்ஸாகாமல் வந்து விழும். நிறைய ஹிட் கொடுத்த பின்னர் அதை பலர் சாதாரணமாக கடந்து சென்று விட்டனர்.

இதையும் படிங்க: ரம்பாவை டிரெயினில் போட்டு புரட்டிய லைலா… ஆனா அதுக்கு காரணம் கேட்டா தான் ஷாக் ஆகிடுவீங்க..!

ஆனால் பாலாவின் ஆரம்ப காலத்தில் இந்த இயக்குனருக்கு உண்மையிலேயே இயக்க தெரியுமா என்று தான் பிரபலங்களுக்கு தோன்றுமாம். நடிகர் சூர்யாவின் சாக்லேட் பாய் லுக்கை மாத்தி அவருக்கும் நடிக்க தெரியும் எனப் பேச வைத்தது நந்தா திரைப்படம் தான். அதிலும் முரட்டு தனமான கதை.

இதில் நாயகியாக லைலா நடித்து இருந்தார். அவருக்கு எந்த கதையில் நடிக்கிறோம் என்றே தெரியவில்லையாம். ஒரு நாள் ஹோட்டல் ரூமுக்கு வந்த லைலா தாயிடம் கதறி அழுகிறார். என்னவென்று கேட்க அந்த இயக்குனர் ஷூட்டிங்கில் கதையே சொல்ல மாட்டாராரு. ரொம்ப திட்டுறாங்க. இப்படி பாரு. அப்படி பாருனு சொல்றாரு. எனக்கு புரியலை இந்த படம் வேண்டாம். ஊருக்கு போலாம் என்கிறார்.

இதையும் படிங்க: என்னோட லவ் ஸ்டோரி பத்தி தெரியனும்னா அந்தப் படத்தை பாருங்க! தன் காதலியை பற்றி மனம் திறந்த எஸ் ஜே சூர்யா

வெறுப்பாக போய் உட்கார்ந்த லைலாவிற்கு அதிர்ச்சி ஆகிவிட்டதாம். நாமளா இப்படி நடிச்சிருக்கோம் என யோசிச்சுட்டு இருக்கார். படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற லைலா பாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டதாம். உடனே லைலா நேரில் போய் பாலாவை பார்த்து பாலா காலில் விழுந்து தான் தப்பாக நினைத்த சம்பவத்தை சொல்லி மன்னிச்சுடுங்க என மன்னிப்பு கேட்டு வந்த சம்பவமும் நடந்ததாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top